இனியவளே

இனியவளே..
என் காதலை சொல்ல ஒன்றுக்கு
மூன்று பூக்கள் பறித்து வந்தேன்
ஏதேனும் ஒன்றாவது வாடாமல்
இருக்குமென்று

என்ன அதிசயம் பூவான
உனைக் கண்டவுடன் எல்லா
பூக்களும் சிரிக்கிறது

***************************
அழகான பூவாக
இருந்தாலும்
பூக்கடையில் பூ
வாங்க பிடிக்காது

அவர்கள் யாரை
நினைத்து பறித்தார்களோ
யாருக்கு தெரியும்

*************************
தயவு செய்து
என்னை கவிஞன்
என்று எப்போதும்
ஏற்றுக்கொள்ளாதே
ஏனெனில்

ஒவ்வொரு தடவையும்
நான் உண்மை சொல்லும்
போதும் உன்னிடம் உண்மை
சொல்லவாவென கேட்டு விட்டு
சொல்ல வேண்டி வரும்

***********************

என் நம்பிக்கைதான் நீ என்று சொன்ன

பின்னும் உன் வாழ்க்கையை தர மறுத்தால்

நம்பிக்கைதான் வாழ்க்கை என்பது பொய்த்து

விடுமல்லவா நீயே சொல்…….


0 comments:

Design by Blogger Templates