காதல் கவிதை

“மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து வானத்தில் உறங்கிட ஆசையடி...
நம்மாசை உடைத்து நார் நாராய் கிழித்து முள்ளுக்குள் எறிந்தது காதலடி..
கனவுக்குள்ளே காதலைத்தந்தாய அணுக்கள் தோறும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால் கைகள் முழுக்க ரத்தம்..”

“கண்ணீரை கேட்கும்
காயங்கள் கூட்டும்
ஆயினும் காதலும் சாகுமா...???
உன்னோடு நீ மோதிடும் போர்க்களம்
அட அதுதானப்பா காதலும்...”

“கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்..
அதுபோல தானே உந்தன் காதல் எனக்கும்..
நடைபாதை விளக்கா காதல்
விடிந்தவுடன் அணைப்பதற்கு..??
நெருப்பாலும் முடியாதம்மா
நினைவுகளை அழிப்பதற்கு...”

“காதல் என்பது போதிமரம்
காயம் பட்டால் ஞானம் வரும்..
காதல் என்பது பாலைவனம்
ஆனால் அங்கும் நிலவு வரும்.

இது கண்ணால பேசி இரு இதயம்
தினம் ஆடிப்பார்க்கிற தாயமடா..
கண்ணாடி போல காதல்தான்
கையில் எடுக்கையில் கவனமடா....”

“காதல் தந்த வலி தீரும்
காதலினாலே....
கண்ணீரோடு முத்தங்கள்
கலந்ததினாலே...”

“தோற்றம் மாறலாம்
தொலைந்து போகலாம்
ஞாபக மேகம் மறையாதே.....”

“தவம் போதவில்லை என்றே
தேவதை வரவில்லையோ....”

“ஓடும் மேகங்கள் ஓய்வு கொள்ளலாம்..
மழையாய் பொழிந்தே தன் பாரம் தீர்க்கலாம்
அழுதால் கூட தீரா சுமையயே...
காதல் தீயில் கருகும் இமையே...

கண்கள் விளையாடி காதல் வந்தது
இதயம் களவாட துணிவு தந்தது
இதயம் தந்து இதயம் வாங்கும்
காதல் என்றும் வெல்லும் வெல்லுமே...”

“தூக்கி எறிய
தீயில் சரிய
காதல் மனம் என்ன காகிதமா..?
என்னை மீறி
உன்னை எண்ணினேன்..
ஒரு மின்னல் திரி இருள் அள்ளினேன்...

கைகள் கொடுத்து
தூக்கி நிறுத்து
வீழ்த்திச்சென்றவள் நீயல்லவா..?”

“வண்ணம் கலைந்து கிடக்கிறதே
வானவில்லே நீ எங்கே...?
வாசம் மட்டும் வருகிறதே...
பூவே உன் முகம் எங்கே..?
கொலுசின் ஓசை ஒலிக்கிறதே
கால்கள் சென்ற தடம் எங்கே..?
துடிப்பு மடடும் கேட்கிறதே
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே....?”

“அடி பெண்ணே பிரிந்தாய்
தேடும் போதே தொலைந்தாய்....”

“உன் விரல் பிடித்திடும்
வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி..
என் காதலும்
என்னாகுமோ...
உன் பாதத்தில் மண்ணாகுமோ...????”

0 comments:

Design by Blogger Templates