காதல் செய்…!

காதலை
கண்களில் வைத்து
உறங்கி விடாதீர்கள்

இதயத்தில் வைத்து
எப்போதும் இயங்க
வையுங்கள்

*
மலிவான பொருள் கூட
விலைமதிப்பற்ற பொருளாவது
காதலர்கள் பரிமாறும் பரிசுப்
பொருள்களில் மட்டும்தான்

*

உன்னைப் பார்த்து
காதல் வரக் கூடாது
உன் காதலைக் கேட்டு
காதல் வர வேண்டும்

*

குழந்தைகளுக்கு
புன்னகை
அழகென்றால்

காதலர்களுக்கு
குழந்தைத்தனமே
அழகு

*

ஒரு பூவால்
இருவரை மலரவைக்க
முடியும் என்றால்

காதலர்கள் கரம் சேரும்
பூக்களால் மட்டும்தான்

*

காதலை பொழிந்து
கொண்டேயிருங்கள்

காதலித்தவள்(ர்) உங்களை
காயவைத்துக் கொண்டே
இருந்தாலும்

*

எந்த இழப்பும்
சந்தோசத்தை
கொடுப்பதில்லை

காதலிப்பவர்களிடம்
உங்களை நீங்கள் இழந்து
கொண்டிருப்பதைப் போல்

*

காதல் ஒரு அழகான மதம்
அதில் மூட நம்பிக்கையே
வேதம்

*

மொழிகளை
அழகாக்கிக்
கொண்டிருப்பவை

காதல் கவிதைகள்
மட்டும்தான்

*

எதுவெல்லாம் உன்
உரிமைகள் என்பதை
தெரிந்து
கொள்வதற்காகவாவது

நன்றி இணையம் .......!!!

0 comments:

Design by Blogger Templates