காதல் என்பதா...........??

ஒற்றை சிறகு கொண்டு
சுற்றி பார்க்கும் கிளி போல்
தத்தை நெஞ்சு தத்தளிக்குதே...
தூங்கும் போது விழித்து
நான் விழித்த பின்பும் கனவில்
வயது என்னை வம்பு செய்யுதே...

மாலை நேரம் வந்தால்
என்மனதில் நாணம் இல்லை
மார்பில் உள்ள ஆடை
என் பேச்சை கேட்கவில்லை
இதய கோடையில்
பூக்கள் எரியுதா
இதற்க்கு பேர் காதல் என்பதா...


மனசில் மையம் தேடி
புயல் மையம் கொண்டதென்ன
எந்த நேரம் கரையை கடக்குமோ...
கடலில் அலைகள் போலே
என் உடலில் அலைகள் தோன்றி
கும்மி கொட்டி கொந்தளிக்குமோ...

என்ன நேரும் என்று
என் அறிவு அறியவில்லை
ரகசியங்கள் அறிந்தால்
அதில் ரசனை ஏதுமில்லை
என்னை கொல்வதா
இளைய மன்மதா
இதற்க்கு பேர் காதல் என்பதா...

காதல் என்பதா.......................... ????

0 comments:

Design by Blogger Templates