பெண்ணே நீ


கவிதையாய் மிளிர்கிறாய்
காற்றில் தென்றலாய் உலவுகின்றாய்

கற்பனைகள் அலை மோதும்
கடலாய் தவழ்கின்றாய்

காதலின் மெல்லிசையாய்
கருத்துக்களின் கருவிடமாய்
கண்மணி நீ உள்ளாய்
காலத்தின் பெட்டகமாய்

கவியான வாழ்வு தன்னில்
கலக்கம் வேண்டாமடி
கரை தன்னை நீந்திடுவாய்
கண்ணீர் கூடாதடி

வலியின் கொடுமை புரிந்து விட்டால்
வாழ்வின் அர்த்தம் விளங்குமடி
வளர்ந்து விடடி பெண்ணே நீ..
வானம் என்றும் அருகிலடி....


நன்றி .....

0 comments:

Design by Blogger Templates