சில கவிதை துளிகள்



நீ
என் இதயத்தில்
இருப்பவள் அல்ல
என் இதயமாயிருப்பவள்
என்பதால்தான்
உன்னை காதலிக்கிறேன்

*

என் கவிதைகளில்
எழுத்துப் பிழைகள்
அதிகம்தான்

என்னுடைய பிழைகள்
எல்லாமே நீ கவிதையாக
இருந்தும் எழுதியதே

*

நான்
உன் கவிதைகளுக்கு
வாசகன் மட்டுமல்ல

உன் கவிதைகளை படிக்கும்
யாரக இருந்தாலும் அவர்களின்
கண்ணாடியின் தூசு துடைக்கும்
வேலைக்காரனும் கூட

*

அன்பே உனக்காக
என் கவிதைகளை
தூதனுப்புகிறேன்
காரணம்

உன் இதயத்தில்
ஓர் இடம்
வேண்டும் எனக்கு

ஏனென்றால்
எனக்கான உலகம்
அங்குதான் இருக்கிறது

*

நிலா; நீ வேண்டும்
என்கிறது என் இரவுகள்

நிலா; நீ வேண்டும்
என்கிறது என்
நட்சத்திரங்கள்

ஏன் தெரியுமா...?
எனக்கான துணை
நீ என்பதால்

*

நீ நீலாதான்
அதற்கான சாட்சியங்கள்
என்னிடம் நிறையவே உண்டு
நீ நிலாதான்
அதனால்தான்
நட்சத்திரங்கள் எனும்
கூட்டத்தோடு எப்போதும்
வருகிறாய்

*

உன் துணையாகும்
வயதுதான் எனக்கு
இருந்தும்

திருவிழாக் கூட்டத்தில்
உன்னைக் கண்டால்
காணாமல் போகும்
குழைந்தையாகிறேன்

*

இன்னும்
எனக்கு ஞாபகம் இருக்கிறது
உன் பொம்மைக் குழைந்தைக்கு
நான் தான் அப்பா என்று
அறிமுகப்படுத்திய உன்
குழைதைத்தனம்

*

உன் அடக்கத்துக்கு
ஆபரணமாகிறது
உன் புன்னகை

உன் நாணத்துக்கு
அலங்காரமாகிறது
உன் கண்கள்

0 comments:

Design by Blogger Templates