உன் பாஸ்பரஸ் புன்னகையாலே




இருபத்தி இரண்டு வருடங்கள்
வாழ்வின் நேர்கோட்டில் மட்டுமே
பயணித்துக் கொண்டு இருந்த என்னை,
திரும்பி வர முடியாத உன்
இதயமென்னும் ஒருவழிப் பாதையில்
பயணிக்க வைத்தது நீதான்......

படுத்தவுடன் தூங்கிவிடும்
பழக்கம் இருந்ததெனக்கு..
இப்போதெல்லாம் தூக்கத்தையே தேடும்
பழக்கத்திற்கு ஆளாகி விட்டேன்.
காரணம் தூக்கத்தை விவாகரத்து செய்து,
கனவுகளை எனக்கு திருமணம்
செய்து வைத்தது நீதான்.

உலகுடன் சண்டையிட்டு
விழிகளை மூடிக்கொண்டேன்
கனவில் உன்னை மட்டுமே ரசிக்க. .
நீயும் வந்தாய் என்னுடன்
சண்டையிட்டு என்னை ரசிக்க.

எனக்கு தெரியும்
உன் செல்ல சீண்டல்களும்,
பொய் கோபங்களும்
என்னை ரசிக்கவே என்று..
ஆனாலும் கோபித்தபடியே
அதை நானும் ரசிப்பேன்.

அது சரி யாருமே நுழைய
இயலாத வண்ணம் இத்தனை காவல்கள்
போடப்பட்டிருக்கும் என் கனவு
தேசத்திற்குள் நீ மட்டும் எப்படி
எந்த வித தடங்கலும் இன்றி
எளிதாய் நுழைகிறாய்?

தேசம் விட்டு தேசம் செல்ல
பாஸ்போர்ட், விசா
எல்லாமும் தேவையாயிற்றே,
நீ எப்படி எந்த கடவுச்சீட்டும் இன்றி
என் கனவு தேசத்தில் நுழைகிறாய்?

நீ வருகிறாய்
என் கனவுகளும்
காதலிக்க தொடங்குகின்றன.
நீ சிரிக்கிறாய்
உதிர்ந்த சிறகுகளும்
ஒட்டிக்கொள்கின்றன
என் கற்பனை குதிரைக்கு..

குதிரைத்திறன் எல்லோருக்கும் தெரியும்
என் குதிரைக்கே திறன் கொடுக்கும்
உன் திறன் யாருக்கு தெரியும்?

அது எப்படி என்
ஒவ்வொரு செல்லும்
உன் சொல்லுக்கு மட்டும்
கட்டுப்படுகின்றன?

நீயோ சிறிதும் இடைவெளி இன்றி
புன்னகைத்துவிட்டு போகிறாய்
உன் புன்னகை தொடர்வண்டியின் கீழ் சிக்கி
சின்னா பின்னமாகும் என் மனதை
யார் வந்து காப்பாற்றுவது?

உன் பாஸ்பரஸ் புன்னகையினால்
பற்றி எரியும் என் மன"தீ"யை அணைக்க
ஒரு வழி சொல்.

புதிர் என்ற வார்த்தைக்கு
அகராதியில் அர்த்தம் தேடினேன்.
என்ன ஆச்சர்யம் அதற்கு நேரே
உன் பெயர். ஆம் அதுவும் சரிதான்.
நீயும் ஒரு புதிர்தானே?

உன் புன்னகையின் மர்மம்
மில்லியன் டாலர் கேள்வி மட்டும் அல்ல.
ட்ரில்லியன் டாலர் கேள்வியும்தான்.

எல்லா புதிருக்கும்
ஒரு விடை இருக்கும்.
உன் புன்னகை புதிருக்கு?

உனக்கு தெரியுமா?
ஒருமுறை நான் கடவுளிடம்
சண்டையிட்டு விட்டேன்.
என்னை பழி வாங்க நினைத்த
கடவுள் ஏதேதோ செய்தார்.
முடியவில்லை பாவம்
தோற்றுப்போய் நின்றார்.
நான் கை கொட்டிசிரித்தேன்.

கடவுள் யோசித்தார்
இறுதியாய் உன்னை அனுப்பினார்.
இப்போது அவர்
கை கொட்டி சிரிக்கிறார்.

நீ என் அருகிலிருக்கும் நேரங்களில்
கடவுளின் வரமாய் தெரிகிறாய் .
நீ என்னைவிட்டு
விலகி இருக்கும் நேரங்களில்
கடவுளின் சாபமாய் தெரிகிறாய்.
நீ எனக்கு வரமா? சாபமா?

நான் உன்னை பூங்கொத்து
கொடுத்து வரவேற்கிறேன்.
நீயோ என்னை உன்
புன்னகை"கொத்தால்" வரவேற்கிறாய்.
சூரியனின் முன் நிற்கும்
விட்டில் பூச்சியைப் போல்
என் பூக்கள் உன் புன்னகையின் முன்
வாடிப்போகின்றன.

இந்த உலகில் தோற்பதை
யாரவது விரும்புவார்களா?
இதோ நானிருக்கிறேன்.
ஆம். உன் முன்னால்
தோற்க நான் விரும்புவேன்.

நான் உன் விளையாட்டுக்களில்
தோற்றவுடன்தான் உன்
முகத்தில் எத்தனை மின்னல்கள்.
மகிழ்ச்சியில் உன் புருவங்கள்
உயர்ந்து கேசங்களாகும் அதிசயத்தை
காண்பதற்காகவே எத்தனை முறை
வேண்டுமானாலும் உன்னிடம் தோற்கலாம்.

உன் தேசத்தில்
உன்னிடம் தோற்பதற்காகவே
படைக்கப்பட்டவன் நான்.

எனக்கு தெரிந்தாலும்
தெரியாத மாதிரி
காட்டிக்கொள்வேன் நான்.
எனக்கு தெரியாது என்பதாய்
நினைத்து நீ விவரித்து கூறும்
அழகுக்காகவே.

பொதுவாய் அதிகமாய்
பேசுவேன் நான்.
உன் முன் மட்டும்
வார்த்தைகளை பூட்டி வைத்துவிட்டு
செவிகளை திறந்து வைத்துக் கொள்வேன்.

இந்த உலகில்
எனக்கான மிகப்பெரிய
சந்தோஷம் என்ன தெரியுமா?

உன் படிப்பு, உன் வேலை,
உன் திறமை, உன் நிறம்,
உன் பெற்றோர், உன் உடன் பிறப்புக்கள்,
உன் கடவுள், உன் சிரிப்பு,
உன் அழுகை, உன் தேவைகள்..
இப்படி உன் சம்மந்தப்பட்ட
அத்தனை விஷயங்களும்
எல்லோருக்கும் எதோ ஒரு
வகையில் தெரிந்திருக்கும்.

ஆனால் உன்னைப்பற்றி
யாருக்குமே தெரியாத ஒரு விஷயம்
எனக்கு மட்டுமே தெரியும்.
அது இந்த உலகில் வேறு
யாருக்கும் தெரியாது.

இவ்வளவு ஏன் உன் தாய்க்கு
கூட அது தெரியாது.
அது எனக்கு மட்டுமே தெரியும்.
அது உன் வாசனை.

அதை என்னால் மட்டுமே
உணர முடியும்.
வேறு யாராலும்
உணர முடியாது,
உன்னால் கூட...

நன்றி : கவிதை காதலன்

உன் பாஸ்பரஸ் புன்னகையாலே



இருபத்தி இரண்டு வருடங்கள்
வாழ்வின் நேர்கோட்டில் மட்டுமே
பயணித்துக் கொண்டு இருந்த என்னை,
திரும்பி வர முடியாத உன்
இதயமென்னும் ஒருவழிப் பாதையில்
பயணிக்க வைத்தது நீதான்......

படுத்தவுடன் தூங்கிவிடும்
பழக்கம் இருந்ததெனக்கு..
இப்போதெல்லாம் தூக்கத்தையே தேடும்
பழக்கத்திற்கு ஆளாகி விட்டேன்.
காரணம் தூக்கத்தை விவாகரத்து செய்து,
கனவுகளை எனக்கு திருமணம்
செய்து வைத்தது நீதான்.

உலகுடன் சண்டையிட்டு
விழிகளை மூடிக்கொண்டேன்
கனவில் உன்னை மட்டுமே ரசிக்க. .
நீயும் வந்தாய் என்னுடன்
சண்டையிட்டு என்னை ரசிக்க.

எனக்கு தெரியும்
உன் செல்ல சீண்டல்களும்,
பொய் கோபங்களும்
என்னை ரசிக்கவே என்று..
ஆனாலும் கோபித்தபடியே
அதை நானும் ரசிப்பேன்.

அது சரி யாருமே நுழைய
இயலாத வண்ணம் இத்தனை காவல்கள்
போடப்பட்டிருக்கும் என் கனவு
தேசத்திற்குள் நீ மட்டும் எப்படி
எந்த வித தடங்கலும் இன்றி
எளிதாய் நுழைகிறாய்?

தேசம் விட்டு தேசம் செல்ல
பாஸ்போர்ட், விசா
எல்லாமும் தேவையாயிற்றே,
நீ எப்படி எந்த கடவுச்சீட்டும் இன்றி
என் கனவு தேசத்தில் நுழைகிறாய்?

நீ வருகிறாய்
என் கனவுகளும்
காதலிக்க தொடங்குகின்றன.
நீ சிரிக்கிறாய்
உதிர்ந்த சிறகுகளும்
ஒட்டிக்கொள்கின்றன
என் கற்பனை குதிரைக்கு..

குதிரைத்திறன் எல்லோருக்கும் தெரியும்
என் குதிரைக்கே திறன் கொடுக்கும்
உன் திறன் யாருக்கு தெரியும்?

அது எப்படி என்
ஒவ்வொரு செல்லும்
உன் சொல்லுக்கு மட்டும்
கட்டுப்படுகின்றன?

நீயோ சிறிதும் இடைவெளி இன்றி
புன்னகைத்துவிட்டு போகிறாய்
உன் புன்னகை தொடர்வண்டியின் கீழ் சிக்கி
சின்னா பின்னமாகும் என் மனதை
யார் வந்து காப்பாற்றுவது?

உன் பாஸ்பரஸ் புன்னகையினால்
பற்றி எரியும் என் மன"தீ"யை அணைக்க
ஒரு வழி சொல்.

புதிர் என்ற வார்த்தைக்கு
அகராதியில் அர்த்தம் தேடினேன்.
என்ன ஆச்சர்யம் அதற்கு நேரே
உன் பெயர். ஆம் அதுவும் சரிதான்.
நீயும் ஒரு புதிர்தானே?

உன் புன்னகையின் மர்மம்
மில்லியன் டாலர் கேள்வி மட்டும் அல்ல.
ட்ரில்லியன் டாலர் கேள்வியும்தான்.

எல்லா புதிருக்கும்
ஒரு விடை இருக்கும்.
உன் புன்னகை புதிருக்கு?

உனக்கு தெரியுமா?
ஒருமுறை நான் கடவுளிடம்
சண்டையிட்டு விட்டேன்.
என்னை பழி வாங்க நினைத்த
கடவுள் ஏதேதோ செய்தார்.
முடியவில்லை பாவம்
தோற்றுப்போய் நின்றார்.
நான் கை கொட்டிசிரித்தேன்.

கடவுள் யோசித்தார்
இறுதியாய் உன்னை அனுப்பினார்.
இப்போது அவர்
கை கொட்டி சிரிக்கிறார்.

நீ என் அருகிலிருக்கும் நேரங்களில்
கடவுளின் வரமாய் தெரிகிறாய் .
நீ என்னைவிட்டு
விலகி இருக்கும் நேரங்களில்
கடவுளின் சாபமாய் தெரிகிறாய்.
நீ எனக்கு வரமா? சாபமா?

நான் உன்னை பூங்கொத்து
கொடுத்து வரவேற்கிறேன்.
நீயோ என்னை உன்
புன்னகை"கொத்தால்" வரவேற்கிறாய்.
சூரியனின் முன் நிற்கும்
விட்டில் பூச்சியைப் போல்
என் பூக்கள் உன் புன்னகையின் முன்
வாடிப்போகின்றன.

இந்த உலகில் தோற்பதை
யாரவது விரும்புவார்களா?
இதோ நானிருக்கிறேன்.
ஆம். உன் முன்னால்
தோற்க நான் விரும்புவேன்.

நான் உன் விளையாட்டுக்களில்
தோற்றவுடன்தான் உன்
முகத்தில் எத்தனை மின்னல்கள்.
மகிழ்ச்சியில் உன் புருவங்கள்
உயர்ந்து கேசங்களாகும் அதிசயத்தை
காண்பதற்காகவே எத்தனை முறை
வேண்டுமானாலும் உன்னிடம் தோற்கலாம்.

உன் தேசத்தில்
உன்னிடம் தோற்பதற்காகவே
படைக்கப்பட்டவன் நான்.

எனக்கு தெரிந்தாலும்
தெரியாத மாதிரி
காட்டிக்கொள்வேன் நான்.
எனக்கு தெரியாது என்பதாய்
நினைத்து நீ விவரித்து கூறும்
அழகுக்காகவே.

பொதுவாய் அதிகமாய்
பேசுவேன் நான்.
உன் முன் மட்டும்
வார்த்தைகளை பூட்டி வைத்துவிட்டு
செவிகளை திறந்து வைத்துக் கொள்வேன்.

இந்த உலகில்
எனக்கான மிகப்பெரிய
சந்தோஷம் என்ன தெரியுமா?

உன் படிப்பு, உன் வேலை,
உன் திறமை, உன் நிறம்,
உன் பெற்றோர், உன் உடன் பிறப்புக்கள்,
உன் கடவுள், உன் சிரிப்பு,
உன் அழுகை, உன் தேவைகள்..
இப்படி உன் சம்மந்தப்பட்ட
அத்தனை விஷயங்களும்
எல்லோருக்கும் எதோ ஒரு
வகையில் தெரிந்திருக்கும்.

ஆனால் உன்னைப்பற்றி
யாருக்குமே தெரியாத ஒரு விஷயம்
எனக்கு மட்டுமே தெரியும்.
அது இந்த உலகில் வேறு
யாருக்கும் தெரியாது.

இவ்வளவு ஏன் உன் தாய்க்கு
கூட அது தெரியாது.
அது எனக்கு மட்டுமே தெரியும்.
அது உன் வாசனை.

அதை என்னால் மட்டுமே
உணர முடியும்.
வேறு யாராலும்
உணர முடியாது,
உன்னால் கூட...

உன் பாஸ்பரஸ் புன்னகையாலே



இருபத்தி இரண்டு வருடங்கள்
வாழ்வின் நேர்கோட்டில் மட்டுமே
பயணித்துக் கொண்டு இருந்த என்னை,
திரும்பி வர முடியாத உன்
இதயமென்னும் ஒருவழிப் பாதையில்
பயணிக்க வைத்தது நீதான்......

படுத்தவுடன் தூங்கிவிடும்
பழக்கம் இருந்ததெனக்கு..
இப்போதெல்லாம் தூக்கத்தையே தேடும்
பழக்கத்திற்கு ஆளாகி விட்டேன்.
காரணம் தூக்கத்தை விவாகரத்து செய்து,
கனவுகளை எனக்கு திருமணம்
செய்து வைத்தது நீதான்.

உலகுடன் சண்டையிட்டு
விழிகளை மூடிக்கொண்டேன்
கனவில் உன்னை மட்டுமே ரசிக்க. .
நீயும் வந்தாய் என்னுடன்
சண்டையிட்டு என்னை ரசிக்க.

எனக்கு தெரியும்
உன் செல்ல சீண்டல்களும்,
பொய் கோபங்களும்
என்னை ரசிக்கவே என்று..
ஆனாலும் கோபித்தபடியே
அதை நானும் ரசிப்பேன்.

அது சரி யாருமே நுழைய
இயலாத வண்ணம் இத்தனை காவல்கள்
போடப்பட்டிருக்கும் என் கனவு
தேசத்திற்குள் நீ மட்டும் எப்படி
எந்த வித தடங்கலும் இன்றி
எளிதாய் நுழைகிறாய்?

தேசம் விட்டு தேசம் செல்ல
பாஸ்போர்ட், விசா
எல்லாமும் தேவையாயிற்றே,
நீ எப்படி எந்த கடவுச்சீட்டும் இன்றி
என் கனவு தேசத்தில் நுழைகிறாய்?

நீ வருகிறாய்
என் கனவுகளும்
காதலிக்க தொடங்குகின்றன.
நீ சிரிக்கிறாய்
உதிர்ந்த சிறகுகளும்
ஒட்டிக்கொள்கின்றன
என் கற்பனை குதிரைக்கு..

குதிரைத்திறன் எல்லோருக்கும் தெரியும்
என் குதிரைக்கே திறன் கொடுக்கும்
உன் திறன் யாருக்கு தெரியும்?

அது எப்படி என்
ஒவ்வொரு செல்லும்
உன் சொல்லுக்கு மட்டும்
கட்டுப்படுகின்றன?

நீயோ சிறிதும் இடைவெளி இன்றி
புன்னகைத்துவிட்டு போகிறாய்
உன் புன்னகை தொடர்வண்டியின் கீழ் சிக்கி
சின்னா பின்னமாகும் என் மனதை
யார் வந்து காப்பாற்றுவது?

உன் பாஸ்பரஸ் புன்னகையினால்
பற்றி எரியும் என் மன"தீ"யை அணைக்க
ஒரு வழி சொல்.

புதிர் என்ற வார்த்தைக்கு
அகராதியில் அர்த்தம் தேடினேன்.
என்ன ஆச்சர்யம் அதற்கு நேரே
உன் பெயர். ஆம் அதுவும் சரிதான்.
நீயும் ஒரு புதிர்தானே?

உன் புன்னகையின் மர்மம்
மில்லியன் டாலர் கேள்வி மட்டும் அல்ல.
ட்ரில்லியன் டாலர் கேள்வியும்தான்.

எல்லா புதிருக்கும்
ஒரு விடை இருக்கும்.
உன் புன்னகை புதிருக்கு?

உனக்கு தெரியுமா?
ஒருமுறை நான் கடவுளிடம்
சண்டையிட்டு விட்டேன்.
என்னை பழி வாங்க நினைத்த
கடவுள் ஏதேதோ செய்தார்.
முடியவில்லை பாவம்
தோற்றுப்போய் நின்றார்.
நான் கை கொட்டிசிரித்தேன்.

கடவுள் யோசித்தார்
இறுதியாய் உன்னை அனுப்பினார்.
இப்போது அவர்
கை கொட்டி சிரிக்கிறார்.

நீ என் அருகிலிருக்கும் நேரங்களில்
கடவுளின் வரமாய் தெரிகிறாய் .
நீ என்னைவிட்டு
விலகி இருக்கும் நேரங்களில்
கடவுளின் சாபமாய் தெரிகிறாய்.
நீ எனக்கு வரமா? சாபமா?

நான் உன்னை பூங்கொத்து
கொடுத்து வரவேற்கிறேன்.
நீயோ என்னை உன்
புன்னகை"கொத்தால்" வரவேற்கிறாய்.
சூரியனின் முன் நிற்கும்
விட்டில் பூச்சியைப் போல்
என் பூக்கள் உன் புன்னகையின் முன்
வாடிப்போகின்றன.

இந்த உலகில் தோற்பதை
யாரவது விரும்புவார்களா?
இதோ நானிருக்கிறேன்.
ஆம். உன் முன்னால்
தோற்க நான் விரும்புவேன்.

நான் உன் விளையாட்டுக்களில்
தோற்றவுடன்தான் உன்
முகத்தில் எத்தனை மின்னல்கள்.
மகிழ்ச்சியில் உன் புருவங்கள்
உயர்ந்து கேசங்களாகும் அதிசயத்தை
காண்பதற்காகவே எத்தனை முறை
வேண்டுமானாலும் உன்னிடம் தோற்கலாம்.

உன் தேசத்தில்
உன்னிடம் தோற்பதற்காகவே
படைக்கப்பட்டவன் நான்.

எனக்கு தெரிந்தாலும்
தெரியாத மாதிரி
காட்டிக்கொள்வேன் நான்.
எனக்கு தெரியாது என்பதாய்
நினைத்து நீ விவரித்து கூறும்
அழகுக்காகவே.

பொதுவாய் அதிகமாய்
பேசுவேன் நான்.
உன் முன் மட்டும்
வார்த்தைகளை பூட்டி வைத்துவிட்டு
செவிகளை திறந்து வைத்துக் கொள்வேன்.

இந்த உலகில்
எனக்கான மிகப்பெரிய
சந்தோஷம் என்ன தெரியுமா?

உன் படிப்பு, உன் வேலை,
உன் திறமை, உன் நிறம்,
உன் பெற்றோர், உன் உடன் பிறப்புக்கள்,
உன் கடவுள், உன் சிரிப்பு,
உன் அழுகை, உன் தேவைகள்..
இப்படி உன் சம்மந்தப்பட்ட
அத்தனை விஷயங்களும்
எல்லோருக்கும் எதோ ஒரு
வகையில் தெரிந்திருக்கும்.

ஆனால் உன்னைப்பற்றி
யாருக்குமே தெரியாத ஒரு விஷயம்
எனக்கு மட்டுமே தெரியும்.
அது இந்த உலகில் வேறு
யாருக்கும் தெரியாது.

இவ்வளவு ஏன் உன் தாய்க்கு
கூட அது தெரியாது.
அது எனக்கு மட்டுமே தெரியும்.
அது உன் வாசனை.

அதை என்னால் மட்டுமே
உணர முடியும்.
வேறு யாராலும்
உணர முடியாது,
உன்னால் கூட...

0 comments:

Design by Blogger Templates