நீ சொற்கள் நிறுத்தி


நீ சொற்கள் நிறுத்தி

பார்வை தொடங்கியதும்

கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!

*

இரண்டு முத்தங்கள் கொடுத்து

இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.

இயலாத செயலென

இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.

*

யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்

எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள

என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.

எப்பொழுதும் அளந்தே பேசுபவன்

உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே

அளவின்றி பேசுகிறேன்.

*

உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்

எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட

சிறகடித்து தவிக்கும் இமைகள்!

*

தனியே நீ முணுமுணுக்கும்

இனிய பாடல்கள்

இசைத்தட்டில் ஒலிக்கையில்

இனிமை இழப்பதேன்?

உன் வரவின்றி

உன்னைக் காண
காத்திருந்து

என்
கைக் கடிகாரத்தை
பார்த்து களைத்துப் போய்

தினமும்
திரும்பிச் செல்கிறேன்
உன் வரவின்றி…

நன்றி இணையம் .......!

எங்கிருந்தாய் இதுவரை நீ..


அன்புச் சிலையே
ஆசைக் கிளியே

என்ன இது
என்னை என்ன
செய்தாய்

இதயம் துடிக்கவில்லை
சத்தம் மட்டும் அதிருது

இரவுகள் என்னை தலாட்ட
மறுக்கிறது இரு விழிகளும்
சூரியனாய் சுட்டெரித்து உன்
நினைவுகளை படரவிடுகிறது
உன்னோடு இருக்கையில்
மெளனமே மொழியாகிறது
தனியாய் இருக்கையில்
ஏதேதோ பிசத்துவதே
என் மொழியாகிறது

அழகாய் பூத்திருந்த என்
இதயத்தில் புதிதாய் யாரோ
குடிவந்ததாய் உண்ர்கிறேன்

குடும்ப உறுப்பினர்கள் மத்தியில்
அன்பே தனியாய் உன் நினைவுகளை
திரையிட்டு உள்ளுக்குள் சிரித்து ரசிக்கிறேன்

என்னை சுற்றி இந்த உலகமே
வேடிக்கை பார்ப்பதறியாமல்
குழந்தைகளோடு குழந்தையாகி
கும்மாளமடிக்கிறேன்

இப்போது உனக்காக
காத்திருக்கும் நேரமிது

கொஞ்ச நேரம் நிற்கிறேன்
கொஞ்ச நேரம் இருக்கிறேன்
கொஞ்ச நேரம் சாய்கிறேன்
கொஞ்ச நேரம் நடக்கிறேன்
கொஞ்ச நேரம் கவி எழுதுகிறேன்

மீதி நேரம் இருந்தால்
செய்ததையே திருப்பிச்
செய்கிறேன்

செல்லம் என்ன இது
என்னை என்ன செய்தாய்

இதுவரை நான்
எப்படிப்பட்டவனாக
இருந்தேன் என்று தெரியாது

ஆனால் ஏனோ
இப்பொழுதெல்லாம்
கவிதை எழுதும் போது
காகிதங்களை காயப்படுத்துவதாய்
உணருகிறேன்
அன்பே என்னை
என்ன செய்தாய்

நன்றி இணையம் .......!!

காதல் செய்…!

காதலை
கண்களில் வைத்து
உறங்கி விடாதீர்கள்

இதயத்தில் வைத்து
எப்போதும் இயங்க
வையுங்கள்

*
மலிவான பொருள் கூட
விலைமதிப்பற்ற பொருளாவது
காதலர்கள் பரிமாறும் பரிசுப்
பொருள்களில் மட்டும்தான்

*

உன்னைப் பார்த்து
காதல் வரக் கூடாது
உன் காதலைக் கேட்டு
காதல் வர வேண்டும்

*

குழந்தைகளுக்கு
புன்னகை
அழகென்றால்

காதலர்களுக்கு
குழந்தைத்தனமே
அழகு

*

ஒரு பூவால்
இருவரை மலரவைக்க
முடியும் என்றால்

காதலர்கள் கரம் சேரும்
பூக்களால் மட்டும்தான்

*

காதலை பொழிந்து
கொண்டேயிருங்கள்

காதலித்தவள்(ர்) உங்களை
காயவைத்துக் கொண்டே
இருந்தாலும்

*

எந்த இழப்பும்
சந்தோசத்தை
கொடுப்பதில்லை

காதலிப்பவர்களிடம்
உங்களை நீங்கள் இழந்து
கொண்டிருப்பதைப் போல்

*

காதல் ஒரு அழகான மதம்
அதில் மூட நம்பிக்கையே
வேதம்

*

மொழிகளை
அழகாக்கிக்
கொண்டிருப்பவை

காதல் கவிதைகள்
மட்டும்தான்

*

எதுவெல்லாம் உன்
உரிமைகள் என்பதை
தெரிந்து
கொள்வதற்காகவாவது

நன்றி இணையம் .......!!!

என் முதல் காதல்

என் முதல்
காதல் நீ

நான்
காதலித்ததே
உனக்கு தெரியாது.

என் கடைசி
காதல் நீ

நான்
உன்னை மட்டும்
காதலித்ததுதான்
உனக்கு தெரியும்.


அவள் யாரோ


ன்று
உன்னை காதலிக்கும் போது
காதலுக்குப் பயப்பிட்டேன்

இன்று
யாரையும் காதலிக்க
பயப்பிடுகிறேன்
உன்னை மாதிரியே
இருந்துவிடுவாளோ
என்று

*

நீ
எது வாங்கிக் கொடுத்தாலும்
எதையாவது செய்துவிடுவேன்
பதிலுக்கு

“கடன் உறவை பிரிக்கும்”
என்பதால்

இன்று பிரிவை
தந்திருக்கிறாய்
பதிலுக்கு என்ன
செய்வேன்…?

*

தொலைந்த நாய்குட்டியைத்
தேடி விளம்பரப்படுத்தும்
மனசுள்ள உனக்கு

உன்னால் தொலைந்து போன
என்னை தேடிப்பார்க்கும்
கண்கள்கூடவா இல்லை

*
தினமும்
நாட்காட்டிகளை
நானும் கிழிக்கிறேன்

உன்னால்
வீணாய் போய்க்கொண்டிருக்கும்
நாட்களை பார்க்கப் பிடிக்காமல்

*

நீ
பிரிந்த பின்னும்
உன்னை காதலிக்காமல்
இருந்ததில்லை நான்

கவிதைகள்
வேண்டுமே
என் தனிமைக்கு


காதல் கதை

காதல் கதை என்று எனது கதைக்கு தலைப்பிடுவது பொய்யாகிப்போய் விடும்...

காதல் கதைகள் என்று பன்மைப்படுத்தப்படுவதே சரியானது...

ஒன்பதாம் வகுப்பில் காதலித்த பெண்ணுக்கு ஒரு பொறியியலாளர் கணவராகிவிட்டார்..

பதினொன்றில் காதலித்த பெண் பற்றி இன்றுவரை தகவல் இல்லை..

பதின்மூன்றில் காதலித்தவளை எனக்கே பிடிக்கவில்லை..

பல்கலைக்கழகத்தில் என்னை காதலித்த இருவருமே எனக்கு 2 வருடத்துக்கு மூத்தோர்கள்..

இருபது வயதில் ஒரு முகம் காணா இறுக்கமான காதல்...இதை மட்டும்தான் எனது கதையில் உண்மையான அன்பிலும் பிணைப்பிலும் பூத்ததொரு காதல் எனச்சொல்வேன்..(உபயம்---செல்போன்)

எனது கவிதைகளின் ரசிகையாக அறிமுகமானவள்..அப்போதெல்லாம் தினகரன் வாரமஞ்சரியில் எனது கவிதைகள் தொடர்ந்து பிரசுரமாகி வந்த மல்லிகை நாட்கள்..கிறுக்கல்கள் பிரசுரமாவதாக சக நண்பர்கள் கிணடலடித்த நிலையில் இரத்தினபுரியிலிருந்து ஒர மடல்..."காதலிக்கிறேன்..உங்கள் கவிதைகளை.."என்று அவள் எழுதிய வரிகளை இதுவரை நான் குறைந்தது மூன்று லட்சம் தடவைகளாவது படித்திருப்பேன்...

அதுதான் எனது கவிதைகளை பாராட்டி வந்த முதல் மடல்..அதில் அவள் உயிர் செதுக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தேன்..(பாராட்டுக்களை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப்போது வாய்க்காததால் வந்த வினை)

முடிவு...தினகரனுக்கு தபாலிட வேண்டிய எனது புதிய கவிதைகள் இரத்தினபுரிக்கு போகலாயிற்று...

180 நாட்கள்...7 மடல்கள் எங்கள் சொந்த விடயங்களின் சகலமம் பரிமாறப்பட்ட பிறகுதான் முதல் முதலில் தொலைபேசியில் உரையாடினோம்...(2005-06-04)

அவள் குரல் சத்தியமாய் என்னைக்கவரவில்லை..இருந்தும் குயில் போல (எல்லோரும் சொல்லும் பொய்தான்...இந்த விடயம் நல்லவேளை குயிலுக்கு தெரிய வாய்ப்பில்லை)என்று நான் சொன்னதை அவள் நம்பவில்லை..

பிறகு மடல்கள் பரிமாறப்படவில்லை..தொலைபேசியில் தேவையற்ற எல்லாமம் பேசத்தொடங்கினோம் காதலர்களைப்போல..(பிறகு..வேற சொல்லுங்க..மௌன இடைவெளிகள்..விஷேஷம்..?? நலமா..?ஹலோ என்று நூறுமுறை...என்ன செய்றீங்க என்று திரும்பத்தீரும்ப) பேசலானோம்...

எஸ்.எம்.எஸ் இன் துணையுடன் காதலையும் பகிர்ந்துகொண்டோம்...நல்லவேளை இதற்கு முன் அவளும் ஒருத்தரை விரும்பியிருக்கிறாள்..அதனால் எனது பழைய காதல்களைப்பற்றி அவள் அலட்டிக்கொள்ளவேயில்லை...

5 மாதங்கள் ஒருவரை ஒருவர் பாராமல் நல்லதொரு காதல் எங்களை ஆசிர்வதித்திருந்தது..

கொழும்பில் ஒருமுறை இருவரும் சந்திப்பதென்று முடிவெடுத்து 10 செக்கன் மட்டுமே பார்த்துக்கொண்டோம்..அவள் தாயுடன் சொப்பிங் வந்திருந்தாள்..அவள் சொன்ன நேரத்தில் அவள் சொன்ன இடத்தில் அவள் சொன்ன ஆடை நிற அடையாளத்தில் அப்போது இருந்த ஒருவளை அவளாக இருக்கக்கூடும் என்கிற ஊகத்தில் பார்த்துக்கொண்டோம்..அவளும் என்னை ஊகத்திலேயே பார்த்திருக்கிறாள்..நான் அவளுக'கு கொடுப்பதற்கென்று வாங்கிய அன்பளிப்பு இப்போதும் என்னிடமுண்டு..பின்னர் தொலைபேசியில் ஊகத்தை தெளிவாக்கிய பிறகுதான் சரியாகத்தான் அடையாளம் கண்டோம் என்று திருப்திப்பட்டோம்..அழகாகத்தான் இருந்தாள் அவள் தாயைப்போலவே..(?????????)

நாட்கள் நகர்கின்றன..காதலின் உள்ளார்ந்த அர்த்தத்தையும்..அதன் படிமங்களையும் தொடர்ந்து கற்றுக்கொண்டிருந்தேன்..அவளின் தூய அன்பின் வழியாக...

நாட்கள் நகர்கின்றன..

கனவுகளின் வாசலில் ஒவ்வொரு வினாடியும் கற்பனைக்கோலம் போட்டுக்கொண்டிருந்தேன்...அவள் மனைவியாக நான் கணவனாக....வாழ்வின் எல்லை வரை(நன்றி-வைரமுத்து) நாங்கள் இருவரும் மட:டம் தனித்து வாழ்வதாக நிறைய கற்பனைச்சிறகுகள்

ஒரே ஒரு மாறுதல்...அவள் பற்றியோ..அவள் அழகைப்பற்றியோ ஒரு கவிதைதானும் அந்த சர்க்கரைப்பொழுதுகளில் நான் எழுதவில்லை..(அவளைப்பிரிந்த பிறகு எழுதிக்குவிக்கிறேன் என்பது வேறு கதை)..

எங்கள் இருவருக்குமிடையலான காதலில் புயல் வீசத்தொடங்கிய அந்த சித்திரை மாதத்தின் முதல் தினம் விடிகிறது..

எனது வாழ்க்கையில் பாரிய சரிவொன்று எனக்காக காத்திருந்ததை எந்த அசரீரியும் எனக்குச்சொல்லவில்லை.

.தாங்கவொண்ணா பிரிவு பற்றி இன்று வரை நான் எழுதும் கவிதைகள் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு முன்பு நேர்ந்த கொடூர வலிகளின் பூகம்ப அதிர்வுகளே...

மீள முடியாத அந்தப்பிரிவு எதனால்..?ஏன்..?யாரால...?எப்படி..?இப்பொழுது அவள் எங்கே..?காதலுக்கு என்ன ஆனது..?எல்லாமும் சொல்வேன்...சற்று பொறுங்கள்...


காதல் கவிதை

“மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து வானத்தில் உறங்கிட ஆசையடி...
நம்மாசை உடைத்து நார் நாராய் கிழித்து முள்ளுக்குள் எறிந்தது காதலடி..
கனவுக்குள்ளே காதலைத்தந்தாய அணுக்கள் தோறும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால் கைகள் முழுக்க ரத்தம்..”

“கண்ணீரை கேட்கும்
காயங்கள் கூட்டும்
ஆயினும் காதலும் சாகுமா...???
உன்னோடு நீ மோதிடும் போர்க்களம்
அட அதுதானப்பா காதலும்...”

“கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்..
அதுபோல தானே உந்தன் காதல் எனக்கும்..
நடைபாதை விளக்கா காதல்
விடிந்தவுடன் அணைப்பதற்கு..??
நெருப்பாலும் முடியாதம்மா
நினைவுகளை அழிப்பதற்கு...”

“காதல் என்பது போதிமரம்
காயம் பட்டால் ஞானம் வரும்..
காதல் என்பது பாலைவனம்
ஆனால் அங்கும் நிலவு வரும்.

இது கண்ணால பேசி இரு இதயம்
தினம் ஆடிப்பார்க்கிற தாயமடா..
கண்ணாடி போல காதல்தான்
கையில் எடுக்கையில் கவனமடா....”

“காதல் தந்த வலி தீரும்
காதலினாலே....
கண்ணீரோடு முத்தங்கள்
கலந்ததினாலே...”

“தோற்றம் மாறலாம்
தொலைந்து போகலாம்
ஞாபக மேகம் மறையாதே.....”

“தவம் போதவில்லை என்றே
தேவதை வரவில்லையோ....”

“ஓடும் மேகங்கள் ஓய்வு கொள்ளலாம்..
மழையாய் பொழிந்தே தன் பாரம் தீர்க்கலாம்
அழுதால் கூட தீரா சுமையயே...
காதல் தீயில் கருகும் இமையே...

கண்கள் விளையாடி காதல் வந்தது
இதயம் களவாட துணிவு தந்தது
இதயம் தந்து இதயம் வாங்கும்
காதல் என்றும் வெல்லும் வெல்லுமே...”

“தூக்கி எறிய
தீயில் சரிய
காதல் மனம் என்ன காகிதமா..?
என்னை மீறி
உன்னை எண்ணினேன்..
ஒரு மின்னல் திரி இருள் அள்ளினேன்...

கைகள் கொடுத்து
தூக்கி நிறுத்து
வீழ்த்திச்சென்றவள் நீயல்லவா..?”

“வண்ணம் கலைந்து கிடக்கிறதே
வானவில்லே நீ எங்கே...?
வாசம் மட்டும் வருகிறதே...
பூவே உன் முகம் எங்கே..?
கொலுசின் ஓசை ஒலிக்கிறதே
கால்கள் சென்ற தடம் எங்கே..?
துடிப்பு மடடும் கேட்கிறதே
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே....?”

“அடி பெண்ணே பிரிந்தாய்
தேடும் போதே தொலைந்தாய்....”

“உன் விரல் பிடித்திடும்
வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி..
என் காதலும்
என்னாகுமோ...
உன் பாதத்தில் மண்ணாகுமோ...????”

Design by Blogger Templates