ஒரு சிறந்த கவிதை
எழுத நினைத்தேன்
முயற்சி செய்தேன் !
முடியவில்லை
உன்னைவிட
ஒரு சிறந்த கவிதை - எழுத
எவராளும் முடியாது
Posted at 5:56 AM | | 0 Comments
சில கவிதை துளிகள்
நீ
என் இதயத்தில்
இருப்பவள் அல்ல
என் இதயமாயிருப்பவள்
என்பதால்தான்
உன்னை காதலிக்கிறேன்
*
என் கவிதைகளில்
எழுத்துப் பிழைகள்
அதிகம்தான்
என்னுடைய பிழைகள்
எல்லாமே நீ கவிதையாக
இருந்தும் எழுதியதே
*
நான்
உன் கவிதைகளுக்கு
வாசகன் மட்டுமல்ல
உன் கவிதைகளை படிக்கும்
யாரக இருந்தாலும் அவர்களின்
கண்ணாடியின் தூசு துடைக்கும்
வேலைக்காரனும் கூட
*
அன்பே உனக்காக
என் கவிதைகளை
தூதனுப்புகிறேன்
காரணம்
உன் இதயத்தில்
ஓர் இடம்
வேண்டும் எனக்கு
ஏனென்றால்
எனக்கான உலகம்
அங்குதான் இருக்கிறது
*
நிலா; நீ வேண்டும்
என்கிறது என் இரவுகள்
நிலா; நீ வேண்டும்
என்கிறது என்
நட்சத்திரங்கள்
ஏன் தெரியுமா...?
எனக்கான துணை
நீ என்பதால்
*
நீ நீலாதான்
அதற்கான சாட்சியங்கள்
என்னிடம் நிறையவே உண்டு
நீ நிலாதான்
அதனால்தான்
நட்சத்திரங்கள் எனும்
கூட்டத்தோடு எப்போதும்
வருகிறாய்
*
உன் துணையாகும்
வயதுதான் எனக்கு
இருந்தும்
திருவிழாக் கூட்டத்தில்
உன்னைக் கண்டால்
காணாமல் போகும்
குழைந்தையாகிறேன்
*
இன்னும்
எனக்கு ஞாபகம் இருக்கிறது
உன் பொம்மைக் குழைந்தைக்கு
நான் தான் அப்பா என்று
அறிமுகப்படுத்திய உன்
குழைதைத்தனம்
*
உன் அடக்கத்துக்கு
ஆபரணமாகிறது
உன் புன்னகை
உன் நாணத்துக்கு
அலங்காரமாகிறது
உன் கண்கள்
Posted at 2:15 AM | Labels: காதல் கவிதை | 0 Comments
கண்ணீரின் இடையில்
பிறக்கிறது காதல்;
முட்களின் மத்தியில்
பூக்கிறது ரோஜா!
விழியோடு ஒட்டி
உறவாடி உயிரோடு
பேசியிருந்தவனை கலைத்துப்போட்டது
அவரின் குரல்!
என்ன கேட்டார்
ஏது பேசினார் என
அறியா நிலையில்
என்ன கேட்டீங்க
எனத் தடுமாறி
அசடு வழிய கேட்க
அவள் இதழ் சிந்திய
புன்னகை காதோடு
பேசியது கேலி மொழி!
அடுத்து என்ன படிப்பதாய் உத்தேசம்?
மதிப்பெண் பார்த்துதான் முடிவு.
அவளும் அப்படித்தான் சொல்லுறா
நல்லா எழுதியிருக்கியா?
ம் நல்லா எழுதி இருக்கேன்.
அறிந்த மொழியெல்லாம்
அறிவிலிருந்து அவசரமாய் அழிந்திட
அரைகுறையாய் வந்தன
வார்த்தைகள் மட்டும்;
என்ன புத்தகம் படிப்பாய்?
எதுவானாலும் சரி
‘ப்ரியா’ அந்த புத்தகம் முடித்துவிட்டாயா?
ம் முடிச்சுட்டேன்ப்பா
சரி அதை கொண்டுவந்து தம்பிக்கு தா
அப்பா எழுந்து சென்றிட
அடடா தேவதை படித்த புத்தகமா?
தேவதை கண்கள் வருடிய புத்தகமா?
கனவில் ஆழ்ந்திருந்தேன்.
அமைதியான நீர்நிலையில்
சலனம் உண்டாக்கும் இலையென
உன் குரல்
கனவின் இழை அறுக்க
கையில் தந்தாய் தண்ணீர் தேசம்
மீண்டும்
பயணிக்கத் தொடங்கினேன்
என் கனவு தேசம் நோக்கி!
nantri piriyan
Posted at 6:51 AM | | 0 Comments
உன் பாஸ்பரஸ் புன்னகையாலே

வாழ்வின் நேர்கோட்டில் மட்டுமே
பயணித்துக் கொண்டு இருந்த என்னை,
திரும்பி வர முடியாத உன்
இதயமென்னும் ஒருவழிப் பாதையில்
பயணிக்க வைத்தது நீதான்......
படுத்தவுடன் தூங்கிவிடும்
பழக்கம் இருந்ததெனக்கு..
இப்போதெல்லாம் தூக்கத்தையே தேடும்
பழக்கத்திற்கு ஆளாகி விட்டேன்.
காரணம் தூக்கத்தை விவாகரத்து செய்து,
கனவுகளை எனக்கு திருமணம்
செய்து வைத்தது நீதான்.
உலகுடன் சண்டையிட்டு
விழிகளை மூடிக்கொண்டேன்
கனவில் உன்னை மட்டுமே ரசிக்க. .
நீயும் வந்தாய் என்னுடன்
சண்டையிட்டு என்னை ரசிக்க.
எனக்கு தெரியும்
உன் செல்ல சீண்டல்களும்,
பொய் கோபங்களும்
என்னை ரசிக்கவே என்று..
ஆனாலும் கோபித்தபடியே
அதை நானும் ரசிப்பேன்.
அது சரி யாருமே நுழைய
இயலாத வண்ணம் இத்தனை காவல்கள்
போடப்பட்டிருக்கும் என் கனவு
தேசத்திற்குள் நீ மட்டும் எப்படி
எந்த வித தடங்கலும் இன்றி
எளிதாய் நுழைகிறாய்?
தேசம் விட்டு தேசம் செல்ல
பாஸ்போர்ட், விசா
எல்லாமும் தேவையாயிற்றே,
நீ எப்படி எந்த கடவுச்சீட்டும் இன்றி
என் கனவு தேசத்தில் நுழைகிறாய்?
நீ வருகிறாய்
என் கனவுகளும்
காதலிக்க தொடங்குகின்றன.
நீ சிரிக்கிறாய்
உதிர்ந்த சிறகுகளும்
ஒட்டிக்கொள்கின்றன
என் கற்பனை குதிரைக்கு..
குதிரைத்திறன் எல்லோருக்கும் தெரியும்
என் குதிரைக்கே திறன் கொடுக்கும்
உன் திறன் யாருக்கு தெரியும்?
அது எப்படி என்
ஒவ்வொரு செல்லும்
உன் சொல்லுக்கு மட்டும்
கட்டுப்படுகின்றன?
நீயோ சிறிதும் இடைவெளி இன்றி
புன்னகைத்துவிட்டு போகிறாய்
உன் புன்னகை தொடர்வண்டியின் கீழ் சிக்கி
சின்னா பின்னமாகும் என் மனதை
யார் வந்து காப்பாற்றுவது?
உன் பாஸ்பரஸ் புன்னகையினால்
பற்றி எரியும் என் மன"தீ"யை அணைக்க
ஒரு வழி சொல்.
புதிர் என்ற வார்த்தைக்கு
அகராதியில் அர்த்தம் தேடினேன்.
என்ன ஆச்சர்யம் அதற்கு நேரே
உன் பெயர். ஆம் அதுவும் சரிதான்.
நீயும் ஒரு புதிர்தானே?
உன் புன்னகையின் மர்மம்
மில்லியன் டாலர் கேள்வி மட்டும் அல்ல.
ட்ரில்லியன் டாலர் கேள்வியும்தான்.
எல்லா புதிருக்கும்
ஒரு விடை இருக்கும்.
உன் புன்னகை புதிருக்கு?
உனக்கு தெரியுமா?
ஒருமுறை நான் கடவுளிடம்
சண்டையிட்டு விட்டேன்.
என்னை பழி வாங்க நினைத்த
கடவுள் ஏதேதோ செய்தார்.
முடியவில்லை பாவம்
தோற்றுப்போய் நின்றார்.
நான் கை கொட்டிசிரித்தேன்.
கடவுள் யோசித்தார்
இறுதியாய் உன்னை அனுப்பினார்.
இப்போது அவர்
கை கொட்டி சிரிக்கிறார்.
நீ என் அருகிலிருக்கும் நேரங்களில்
கடவுளின் வரமாய் தெரிகிறாய் .
நீ என்னைவிட்டு
விலகி இருக்கும் நேரங்களில்
கடவுளின் சாபமாய் தெரிகிறாய்.
நீ எனக்கு வரமா? சாபமா?
நான் உன்னை பூங்கொத்து
கொடுத்து வரவேற்கிறேன்.
நீயோ என்னை உன்
புன்னகை"கொத்தால்" வரவேற்கிறாய்.
சூரியனின் முன் நிற்கும்
விட்டில் பூச்சியைப் போல்
என் பூக்கள் உன் புன்னகையின் முன்
வாடிப்போகின்றன.
இந்த உலகில் தோற்பதை
யாரவது விரும்புவார்களா?
இதோ நானிருக்கிறேன்.
ஆம். உன் முன்னால்
தோற்க நான் விரும்புவேன்.
நான் உன் விளையாட்டுக்களில்
தோற்றவுடன்தான் உன்
முகத்தில் எத்தனை மின்னல்கள்.
மகிழ்ச்சியில் உன் புருவங்கள்
உயர்ந்து கேசங்களாகும் அதிசயத்தை
காண்பதற்காகவே எத்தனை முறை
வேண்டுமானாலும் உன்னிடம் தோற்கலாம்.
உன் தேசத்தில்
உன்னிடம் தோற்பதற்காகவே
படைக்கப்பட்டவன் நான்.
எனக்கு தெரிந்தாலும்
தெரியாத மாதிரி
காட்டிக்கொள்வேன் நான்.
எனக்கு தெரியாது என்பதாய்
நினைத்து நீ விவரித்து கூறும்
அழகுக்காகவே.
பொதுவாய் அதிகமாய்
பேசுவேன் நான்.
உன் முன் மட்டும்
வார்த்தைகளை பூட்டி வைத்துவிட்டு
செவிகளை திறந்து வைத்துக் கொள்வேன்.
இந்த உலகில்
எனக்கான மிகப்பெரிய
சந்தோஷம் என்ன தெரியுமா?
உன் படிப்பு, உன் வேலை,
உன் திறமை, உன் நிறம்,
உன் பெற்றோர், உன் உடன் பிறப்புக்கள்,
உன் கடவுள், உன் சிரிப்பு,
உன் அழுகை, உன் தேவைகள்..
இப்படி உன் சம்மந்தப்பட்ட
அத்தனை விஷயங்களும்
எல்லோருக்கும் எதோ ஒரு
வகையில் தெரிந்திருக்கும்.
ஆனால் உன்னைப்பற்றி
யாருக்குமே தெரியாத ஒரு விஷயம்
எனக்கு மட்டுமே தெரியும்.
அது இந்த உலகில் வேறு
யாருக்கும் தெரியாது.
இவ்வளவு ஏன் உன் தாய்க்கு
கூட அது தெரியாது.
அது எனக்கு மட்டுமே தெரியும்.
அது உன் வாசனை.
அதை என்னால் மட்டுமே
உணர முடியும்.
வேறு யாராலும்
உணர முடியாது,
உன்னால் கூட...
நன்றி : கவிதை காதலன்
உன் பாஸ்பரஸ் புன்னகையாலே

வாழ்வின் நேர்கோட்டில் மட்டுமே
பயணித்துக் கொண்டு இருந்த என்னை,
திரும்பி வர முடியாத உன்
இதயமென்னும் ஒருவழிப் பாதையில்
பயணிக்க வைத்தது நீதான்......
படுத்தவுடன் தூங்கிவிடும்
பழக்கம் இருந்ததெனக்கு..
இப்போதெல்லாம் தூக்கத்தையே தேடும்
பழக்கத்திற்கு ஆளாகி விட்டேன்.
காரணம் தூக்கத்தை விவாகரத்து செய்து,
கனவுகளை எனக்கு திருமணம்
செய்து வைத்தது நீதான்.
உலகுடன் சண்டையிட்டு
விழிகளை மூடிக்கொண்டேன்
கனவில் உன்னை மட்டுமே ரசிக்க. .
நீயும் வந்தாய் என்னுடன்
சண்டையிட்டு என்னை ரசிக்க.
எனக்கு தெரியும்
உன் செல்ல சீண்டல்களும்,
பொய் கோபங்களும்
என்னை ரசிக்கவே என்று..
ஆனாலும் கோபித்தபடியே
அதை நானும் ரசிப்பேன்.
அது சரி யாருமே நுழைய
இயலாத வண்ணம் இத்தனை காவல்கள்
போடப்பட்டிருக்கும் என் கனவு
தேசத்திற்குள் நீ மட்டும் எப்படி
எந்த வித தடங்கலும் இன்றி
எளிதாய் நுழைகிறாய்?
தேசம் விட்டு தேசம் செல்ல
பாஸ்போர்ட், விசா
எல்லாமும் தேவையாயிற்றே,
நீ எப்படி எந்த கடவுச்சீட்டும் இன்றி
என் கனவு தேசத்தில் நுழைகிறாய்?
நீ வருகிறாய்
என் கனவுகளும்
காதலிக்க தொடங்குகின்றன.
நீ சிரிக்கிறாய்
உதிர்ந்த சிறகுகளும்
ஒட்டிக்கொள்கின்றன
என் கற்பனை குதிரைக்கு..
குதிரைத்திறன் எல்லோருக்கும் தெரியும்
என் குதிரைக்கே திறன் கொடுக்கும்
உன் திறன் யாருக்கு தெரியும்?
அது எப்படி என்
ஒவ்வொரு செல்லும்
உன் சொல்லுக்கு மட்டும்
கட்டுப்படுகின்றன?
நீயோ சிறிதும் இடைவெளி இன்றி
புன்னகைத்துவிட்டு போகிறாய்
உன் புன்னகை தொடர்வண்டியின் கீழ் சிக்கி
சின்னா பின்னமாகும் என் மனதை
யார் வந்து காப்பாற்றுவது?
உன் பாஸ்பரஸ் புன்னகையினால்
பற்றி எரியும் என் மன"தீ"யை அணைக்க
ஒரு வழி சொல்.
புதிர் என்ற வார்த்தைக்கு
அகராதியில் அர்த்தம் தேடினேன்.
என்ன ஆச்சர்யம் அதற்கு நேரே
உன் பெயர். ஆம் அதுவும் சரிதான்.
நீயும் ஒரு புதிர்தானே?
உன் புன்னகையின் மர்மம்
மில்லியன் டாலர் கேள்வி மட்டும் அல்ல.
ட்ரில்லியன் டாலர் கேள்வியும்தான்.
எல்லா புதிருக்கும்
ஒரு விடை இருக்கும்.
உன் புன்னகை புதிருக்கு?
உனக்கு தெரியுமா?
ஒருமுறை நான் கடவுளிடம்
சண்டையிட்டு விட்டேன்.
என்னை பழி வாங்க நினைத்த
கடவுள் ஏதேதோ செய்தார்.
முடியவில்லை பாவம்
தோற்றுப்போய் நின்றார்.
நான் கை கொட்டிசிரித்தேன்.
கடவுள் யோசித்தார்
இறுதியாய் உன்னை அனுப்பினார்.
இப்போது அவர்
கை கொட்டி சிரிக்கிறார்.
நீ என் அருகிலிருக்கும் நேரங்களில்
கடவுளின் வரமாய் தெரிகிறாய் .
நீ என்னைவிட்டு
விலகி இருக்கும் நேரங்களில்
கடவுளின் சாபமாய் தெரிகிறாய்.
நீ எனக்கு வரமா? சாபமா?
நான் உன்னை பூங்கொத்து
கொடுத்து வரவேற்கிறேன்.
நீயோ என்னை உன்
புன்னகை"கொத்தால்" வரவேற்கிறாய்.
சூரியனின் முன் நிற்கும்
விட்டில் பூச்சியைப் போல்
என் பூக்கள் உன் புன்னகையின் முன்
வாடிப்போகின்றன.
இந்த உலகில் தோற்பதை
யாரவது விரும்புவார்களா?
இதோ நானிருக்கிறேன்.
ஆம். உன் முன்னால்
தோற்க நான் விரும்புவேன்.
நான் உன் விளையாட்டுக்களில்
தோற்றவுடன்தான் உன்
முகத்தில் எத்தனை மின்னல்கள்.
மகிழ்ச்சியில் உன் புருவங்கள்
உயர்ந்து கேசங்களாகும் அதிசயத்தை
காண்பதற்காகவே எத்தனை முறை
வேண்டுமானாலும் உன்னிடம் தோற்கலாம்.
உன் தேசத்தில்
உன்னிடம் தோற்பதற்காகவே
படைக்கப்பட்டவன் நான்.
எனக்கு தெரிந்தாலும்
தெரியாத மாதிரி
காட்டிக்கொள்வேன் நான்.
எனக்கு தெரியாது என்பதாய்
நினைத்து நீ விவரித்து கூறும்
அழகுக்காகவே.
பொதுவாய் அதிகமாய்
பேசுவேன் நான்.
உன் முன் மட்டும்
வார்த்தைகளை பூட்டி வைத்துவிட்டு
செவிகளை திறந்து வைத்துக் கொள்வேன்.
இந்த உலகில்
எனக்கான மிகப்பெரிய
சந்தோஷம் என்ன தெரியுமா?
உன் படிப்பு, உன் வேலை,
உன் திறமை, உன் நிறம்,
உன் பெற்றோர், உன் உடன் பிறப்புக்கள்,
உன் கடவுள், உன் சிரிப்பு,
உன் அழுகை, உன் தேவைகள்..
இப்படி உன் சம்மந்தப்பட்ட
அத்தனை விஷயங்களும்
எல்லோருக்கும் எதோ ஒரு
வகையில் தெரிந்திருக்கும்.
ஆனால் உன்னைப்பற்றி
யாருக்குமே தெரியாத ஒரு விஷயம்
எனக்கு மட்டுமே தெரியும்.
அது இந்த உலகில் வேறு
யாருக்கும் தெரியாது.
இவ்வளவு ஏன் உன் தாய்க்கு
கூட அது தெரியாது.
அது எனக்கு மட்டுமே தெரியும்.
அது உன் வாசனை.
அதை என்னால் மட்டுமே
உணர முடியும்.
வேறு யாராலும்
உணர முடியாது,
உன்னால் கூட...
உன் பாஸ்பரஸ் புன்னகையாலே

வாழ்வின் நேர்கோட்டில் மட்டுமே
பயணித்துக் கொண்டு இருந்த என்னை,
திரும்பி வர முடியாத உன்
இதயமென்னும் ஒருவழிப் பாதையில்
பயணிக்க வைத்தது நீதான்......
படுத்தவுடன் தூங்கிவிடும்
பழக்கம் இருந்ததெனக்கு..
இப்போதெல்லாம் தூக்கத்தையே தேடும்
பழக்கத்திற்கு ஆளாகி விட்டேன்.
காரணம் தூக்கத்தை விவாகரத்து செய்து,
கனவுகளை எனக்கு திருமணம்
செய்து வைத்தது நீதான்.
உலகுடன் சண்டையிட்டு
விழிகளை மூடிக்கொண்டேன்
கனவில் உன்னை மட்டுமே ரசிக்க. .
நீயும் வந்தாய் என்னுடன்
சண்டையிட்டு என்னை ரசிக்க.
எனக்கு தெரியும்
உன் செல்ல சீண்டல்களும்,
பொய் கோபங்களும்
என்னை ரசிக்கவே என்று..
ஆனாலும் கோபித்தபடியே
அதை நானும் ரசிப்பேன்.
அது சரி யாருமே நுழைய
இயலாத வண்ணம் இத்தனை காவல்கள்
போடப்பட்டிருக்கும் என் கனவு
தேசத்திற்குள் நீ மட்டும் எப்படி
எந்த வித தடங்கலும் இன்றி
எளிதாய் நுழைகிறாய்?
தேசம் விட்டு தேசம் செல்ல
பாஸ்போர்ட், விசா
எல்லாமும் தேவையாயிற்றே,
நீ எப்படி எந்த கடவுச்சீட்டும் இன்றி
என் கனவு தேசத்தில் நுழைகிறாய்?
நீ வருகிறாய்
என் கனவுகளும்
காதலிக்க தொடங்குகின்றன.
நீ சிரிக்கிறாய்
உதிர்ந்த சிறகுகளும்
ஒட்டிக்கொள்கின்றன
என் கற்பனை குதிரைக்கு..
குதிரைத்திறன் எல்லோருக்கும் தெரியும்
என் குதிரைக்கே திறன் கொடுக்கும்
உன் திறன் யாருக்கு தெரியும்?
அது எப்படி என்
ஒவ்வொரு செல்லும்
உன் சொல்லுக்கு மட்டும்
கட்டுப்படுகின்றன?
நீயோ சிறிதும் இடைவெளி இன்றி
புன்னகைத்துவிட்டு போகிறாய்
உன் புன்னகை தொடர்வண்டியின் கீழ் சிக்கி
சின்னா பின்னமாகும் என் மனதை
யார் வந்து காப்பாற்றுவது?
உன் பாஸ்பரஸ் புன்னகையினால்
பற்றி எரியும் என் மன"தீ"யை அணைக்க
ஒரு வழி சொல்.
புதிர் என்ற வார்த்தைக்கு
அகராதியில் அர்த்தம் தேடினேன்.
என்ன ஆச்சர்யம் அதற்கு நேரே
உன் பெயர். ஆம் அதுவும் சரிதான்.
நீயும் ஒரு புதிர்தானே?
உன் புன்னகையின் மர்மம்
மில்லியன் டாலர் கேள்வி மட்டும் அல்ல.
ட்ரில்லியன் டாலர் கேள்வியும்தான்.
எல்லா புதிருக்கும்
ஒரு விடை இருக்கும்.
உன் புன்னகை புதிருக்கு?
உனக்கு தெரியுமா?
ஒருமுறை நான் கடவுளிடம்
சண்டையிட்டு விட்டேன்.
என்னை பழி வாங்க நினைத்த
கடவுள் ஏதேதோ செய்தார்.
முடியவில்லை பாவம்
தோற்றுப்போய் நின்றார்.
நான் கை கொட்டிசிரித்தேன்.
கடவுள் யோசித்தார்
இறுதியாய் உன்னை அனுப்பினார்.
இப்போது அவர்
கை கொட்டி சிரிக்கிறார்.
நீ என் அருகிலிருக்கும் நேரங்களில்
கடவுளின் வரமாய் தெரிகிறாய் .
நீ என்னைவிட்டு
விலகி இருக்கும் நேரங்களில்
கடவுளின் சாபமாய் தெரிகிறாய்.
நீ எனக்கு வரமா? சாபமா?
நான் உன்னை பூங்கொத்து
கொடுத்து வரவேற்கிறேன்.
நீயோ என்னை உன்
புன்னகை"கொத்தால்" வரவேற்கிறாய்.
சூரியனின் முன் நிற்கும்
விட்டில் பூச்சியைப் போல்
என் பூக்கள் உன் புன்னகையின் முன்
வாடிப்போகின்றன.
இந்த உலகில் தோற்பதை
யாரவது விரும்புவார்களா?
இதோ நானிருக்கிறேன்.
ஆம். உன் முன்னால்
தோற்க நான் விரும்புவேன்.
நான் உன் விளையாட்டுக்களில்
தோற்றவுடன்தான் உன்
முகத்தில் எத்தனை மின்னல்கள்.
மகிழ்ச்சியில் உன் புருவங்கள்
உயர்ந்து கேசங்களாகும் அதிசயத்தை
காண்பதற்காகவே எத்தனை முறை
வேண்டுமானாலும் உன்னிடம் தோற்கலாம்.
உன் தேசத்தில்
உன்னிடம் தோற்பதற்காகவே
படைக்கப்பட்டவன் நான்.
எனக்கு தெரிந்தாலும்
தெரியாத மாதிரி
காட்டிக்கொள்வேன் நான்.
எனக்கு தெரியாது என்பதாய்
நினைத்து நீ விவரித்து கூறும்
அழகுக்காகவே.
பொதுவாய் அதிகமாய்
பேசுவேன் நான்.
உன் முன் மட்டும்
வார்த்தைகளை பூட்டி வைத்துவிட்டு
செவிகளை திறந்து வைத்துக் கொள்வேன்.
இந்த உலகில்
எனக்கான மிகப்பெரிய
சந்தோஷம் என்ன தெரியுமா?
உன் படிப்பு, உன் வேலை,
உன் திறமை, உன் நிறம்,
உன் பெற்றோர், உன் உடன் பிறப்புக்கள்,
உன் கடவுள், உன் சிரிப்பு,
உன் அழுகை, உன் தேவைகள்..
இப்படி உன் சம்மந்தப்பட்ட
அத்தனை விஷயங்களும்
எல்லோருக்கும் எதோ ஒரு
வகையில் தெரிந்திருக்கும்.
ஆனால் உன்னைப்பற்றி
யாருக்குமே தெரியாத ஒரு விஷயம்
எனக்கு மட்டுமே தெரியும்.
அது இந்த உலகில் வேறு
யாருக்கும் தெரியாது.
இவ்வளவு ஏன் உன் தாய்க்கு
கூட அது தெரியாது.
அது எனக்கு மட்டுமே தெரியும்.
அது உன் வாசனை.
அதை என்னால் மட்டுமே
உணர முடியும்.
வேறு யாராலும்
உணர முடியாது,
உன்னால் கூட...
Posted at 6:50 AM | Labels: காதல் கவிதைகள் | 0 Comments
ரொமான்ஸ் தேசம்

உன் காதல் திசையை நோக்கி
நடக்க செய்யும் என் கால்களின்
அனிச்சை செயலை
என்னவென்று சொல்வது?

பார்......
அவைகளும் உன்னை நோக்கி
காதல் கடிதம் நீட்டுவதை..

உன் இதழ்களை பார்க்கையில்
இரும்புகளிலும் காதல் மலர்கிறது.
நான் மட்டும் எம்மாத்திரம்?
நன்றி : கவிதை காதலன்
Posted at 6:42 AM | Labels: காதல் கவிதை | 0 Comments
ஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?
1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓடிக்கொண்டு இருந்தால், அவள் பார்வை அதில் மட்டுமே ஃபெவிகால் போட்டு ஒட்டியது போல் நிலைத்திருக்கும்.
2) சமீப காலமாக உங்கள் மகள் ரீ-சார்ஜ் செய்ய உங்களிடம் பணம் கேட்கவில்லை என்றால், நிச்சயம் உங்கள் பெண் யாரையாவது காதலித்துக் கொண்டு இருக்கிறாள் என்று அர்த்தம்.
3) ஒழுங்காய் பவுடர் மட்டும் பூசிக் கொண்டு இருந்த பெண், பெர்ஃப்யூமை உபயோகிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டியதுதான். அதுவும் அந்த பெர்ஃப்யூமில் ரோஸ் கோட்டட் பெர்ஃப்யூமை தேடிப்பிடித்து வாங்குவாள்.
4) ஆனந்த விகடன் மட்டுமே படித்துக் கொண்டு இருந்த பெண், Womens Era, Femina படிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் Start ஆகிடுச்சு என்று அர்த்தம்.
5) காதில் கம்மல் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் செல்ஃபோன் இருக்கும். அவளது எல்லா இன்கம்மிங் காலுக்கும் பாடல் இருக்கும். ஆனால் யாரோ ஒருவர் காலுக்கு மட்டும் வைப்ரேட்டிங் மட்டும்தான் இருக்கும். அதுவும் அந்த கால் வந்தவுடன் "சொல்லுப்பா" என்றுதான் ஆரம்பிப்பாள். சத்தியம் போட்டு சொன்னாலும் நம்மால் நம்ப முடியாது அவள் ஆணுடன்தான் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று...
6) தொலைபேசியில் ஊருக்கே கேட்கும் விதமாய் பேசுவாள், ஆனால் சில நேரங்களில் தனக்கே கேட்காதவாறு ஹஸ்கி வாய்சில் பேச ஆரம்பித்தால் அது ஒரு நல்ல தொடக்கம். (கேட்டா மனசும் மனசும் பேசும் போது, வார்த்தைகள் வராதாம். தாங்க முடியலைடா சாமி)
8) எல்லா தோழிகளிடமும் அவள் பேச்சு 3 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் ஒரு மணி நேரம் பேச்சு நீளும். அட இளிசசாவாய் பெற்றோர்களே கொஞ்சம் உற்று கவனியுங்க. எந்த பெண்ணிடம் பேசினாலும் "சொல்லுடி" என்று இயல்பாய் பேசும் பேசும் உங்கள் மகள், ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் "சொல்லு விமலா, அப்புறம் விமலா" என்றபடியே நிமிடத்திற்கு 40 தடவை பேர் சொல்லி கூப்பிடுவாள். தான் பெண்ணிடம்தான் பேசுகிறோம் என்பதை உங்களிடம் நம்ப வைக்க அவள் படும் சிரமம் அது.
9) அடிக்கடி கையில் பரிசுடன் வருவாள். ஏது இது? என்று கேட்டால், "இன்னைக்கு என் ஃபிரண்டுக்கு பர்த்டேம்மா. அவ எனக்கு கிஃப்டா கொடுத்தாம்மா. என்று சொல்வாள்" எந்த பெண் தன்னோட பிறந்த நாளுக்கு தன் தோழிக்கு பரிசு கொடுக்கிறாள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை இந்த கேள்வியை எந்த பெற்றோரும் தன் பெண்ணிடம் கேட்டதாகவும் எனக்கு தெரியவில்லை. பெற்றோர்களே, அடிக்கடி உங்கள் அறிவை ஆஃப் செய்து விடுவீர்களா?
10) அடிக்கடி ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள். அது நிச்சயம் காதல் பாடலாய்தான் இருக்கும் என்பதை நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை.
11) பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி, கண்ணாடியவே முறைச்சி முறைச்சி பார்ப்பாங்க.. கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் ஒரு மனநிலை சரியில்லாதவரையும், இவளையும் பக்கத்தில் உட்கார வைத்தால் இருவருக்கும் நிச்சயம் ஒரு வித்தியாசம் கூட கண்டிபிடிக்க முடியாது.
12) பசங்களுக்கு சில சமயம் டவுட் வரும். இந்தப் பெண் நம்மை காதலிக்கறாளா இல்லையா என்று? கவலையே படாதீங்க. அதுக்கும் ஒரு வழி இருக்கு. யாருமே சிரிக்காத மொக்கை ஜோக்கை அவங்ககிட்ட சொல்லுங்க. விழுந்து விழுந்து சிரிச்சாங்கன்னா அவங்க உங்க வலையில விழுந்துட்டாங்கன்னு அர்த்தம்.
13) "வானம் எவ்ளோ அழகா இருக்கு இல்லை. இந்த கடலோட அலை சத்தம் எவ்ளோ ரம்மியமா இருக்கு இல்லை" என்று உங்களிடம் இயற்கையை வர்ணிப்பாங்க. (இத்தனை நாளா இவங்களுக்கு இந்த ரசனை எங்க போச்சுன்னே தெரியலைப்பா.)
14) வார்த்தைகளே வராமல் ம்ம்ம்ம்.. அப்புறம்... என்று உங்களிடம் பேச ஆரம்பித்தால், அவங்களுக்குள்ள "பல்ப்" எரிய ஆரம்பிச்சுடுச்சின்னு அர்த்தம். சாப்பிட்டியா என்று நீங்கள் கேட்டால் கூட முதலில் கேனத்தனமாக சிரித்துவிட்டு... அப்புறம்தான் பதில் வரும்.
இப்போதைக்கு இது போதும்.... அடுத்த பதிவுல இன்னும் இதைப்பத்தி பேசுவோம்
நன்றி : கவிதை காதலன்
Posted at 6:29 AM | Labels: காதல் கவிதை | 0 Comments
காதலிப்பது எப்பிடி ........ ???
1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..
2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.
3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.
4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.
5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.
6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.
7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்லை.
8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.
9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.
10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.
11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க
12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது
இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்... !
படிச்சிட்டீங்க.... பிடிச்சிருந்தா ..............மட்டும் போதும்... என்ன கமெண்ட்'ன்னாலும் அனுப்புங்க.... !
வினோத்_குமார்
Posted at 3:54 AM | | 0 Comments
எனக்கான நீ
நினைவுகளின் விசும்பினின்று நீ
நித்தமும் மழை பொழிகிறாய்
தீர்க்கையின்றி நானிருக்கையில்
தீநுரையாய் வந்து போகிறாய்...
வசந்தம் வந்தெதிர்பார்க்க
வாழ்க்கைக் கடலில் நீந்தலானோம்
காத்திருப்பு தாளாமல்
கல்யாணம் எதிர் கொண்டோம்
ஓதவனம் தாண்டி- வாழ்க்கை
ஒளி சேர்க்க சென்று விட்டாய்
ஓமிடி வருவதறியாமல்
ஓகையில் தான் திளைத்திருந்தோம்
தொலைபேசியில் வாழ்வு கண்டோம்
ஒருவருக்கொருவர் ஒருவாமை இல்லாமல்....
ஒரு கால் நீ போகாமலிருந்திருந்தால்
ஓராயிரம் இன்பங்கள் காலடியில்...
வரும் நாளை எதிர் பார்த்து
வாயிலில் நின்றிருந்தேன்
வருடம் போனது தெரியவில்லை
வயிறும் பெருத்து போனதடா
வளை சூட நாள் பார்த்து
தொலைபேசியில் ஒலி கண்டாய்
தொப்புள் கொடி அறும் முன்னே
என் முன்னே நீ இருந்திடடா
பிள்ளை அழுகுரல் கேட்டவுடனே
உன் வதனம் என் முன் ஆடும்...
கிலேசத்துடன் நானிருந்தேன்
மயங்கிய நிலையினளாய்
எண்ணியது நடவாமல்...
வீடு வருவாய் என்றிருந்தேன்...
நம் குலக்கொழுந்தோடு
என்றுமில்லாமல்...
எனக்கான நீ
சுவற்றில் காத்திருந்தாய்...
நிழற்படமாய்
என் குங்குமம்
தாங்கியபடி....
Posted at 7:11 AM | Labels: காதல் கவிதை. | 0 Comments
பெண்ணே நீ
கவிதையாய் மிளிர்கிறாய்
காற்றில் தென்றலாய் உலவுகின்றாய்
கற்பனைகள் அலை மோதும்
கடலாய் தவழ்கின்றாய்
காதலின் மெல்லிசையாய்
கருத்துக்களின் கருவிடமாய்
கண்மணி நீ உள்ளாய்
காலத்தின் பெட்டகமாய்
கவியான வாழ்வு தன்னில்
கலக்கம் வேண்டாமடி
கரை தன்னை நீந்திடுவாய்
கண்ணீர் கூடாதடி
வலியின் கொடுமை புரிந்து விட்டால்
வாழ்வின் அர்த்தம் விளங்குமடி
வளர்ந்து விடடி பெண்ணே நீ..
வானம் என்றும் அருகிலடி....
நன்றி ..... கௌசல்யா
Posted at 7:06 AM | Labels: காதல் கவிதை | 0 Comments
உனக்குத் தெரியுமா என
எனக்குத் தெரியாது
உன்னைவிட அழகானவள்
நீ!
நீ முகத்தில்
எழுதும் அதையே
காகிகத்தில் வரைகிறேன்
கவிதை என்கிறது
உலகம்!
எழில் என்பதற்கு
சரியான எடுத்துக்காட்டு
கேட்டேன் உன்னைக் காட்டியது
தமிழ்!
வானப் போர்வையெங்கும்
நட்சத்திர ஓட்டைகள்!
உன் கூந்தல்
உதிர் கறுநூல்களை தா!
தைத்துக் கொள்ளட்டும்
இரவு!
உன் உயிரோடு உயிராகும்
வரம் கூட வேண்டாம்!
உன் உயிருக்கு நிழலாகும்
வாய்ப்பாவது தா!
உறங்கட்டும் விடு!
உன்னை தேடோ
தேடோ என்று தேடி
என்னிடம் கொடுத்த
களைப்பில் உறங்கிக்கிடக்கின்றன
என் கவிதைகள்!
Posted at 7:01 AM | Labels: காதல் கவிதைகள் | 0 Comments
ஏதேதோ...நினைவு!
பிறந்தோம்!
எங்கெங்கோ
வளர்ந்தோம்!
ஆயினும் நாம்
ஒன்றாக பயணித்த
சில நினைவுகள்.....!
தினம் தினம்
வந்து போகின்ற
பேருந்து வரலாம்
வராமல் போகலாம்
வழித்தடமும் மாறலாம்
ஆனால்
நீ மட்டுமே.....
வந்து வந்து போன
சில நினைவுகள்.....!
மனம் விட்டு
பேசிய சில வார்த்தைகள்
வாய்விட்டு சிரித்த
சில நேரங்கள்
உதட்டளவு உறவினை
உதறித் தள்ளிவிட்டு
உள்ளத்தளவில்
உறவினை வளர்த்து
உயிர் வாழ்வோமெனச் சொன்ன
உன் நினைவுகளால்.....!
மறக்க முடியாத
உறவுகளைச் சுமந்து
ஊனமாய் போன உடம்புடன்
நான் மட்டும்
நித்திரை இல்லாத
நினைவுகளோடு.....
இன்னும்
Posted at 8:55 AM | Labels: காதல் கவிதை | 0 Comments
காதலிடம் யாசிக்கிறேன.....
உனக்கு பிடிக்காது என்பதால்
நான் இழந்தவைகளும் ....
எனக்கு பிடிக்கும் என்பதால்
நீ கற்றுக்கொண்டவைகளும் மட்டுமே
நம் காதலை வலுப்படுத்தவில்லை...
நமக்கான வாழ்வின்
பரஸ்பர நம்பிக்கையும் - புரிதலுமே
நம் காதலை மேலும் அழகாக்கியது...
எனக்கான உன் தவிப்பும்...
உனக்கான என் அக்கறையும்...
நம் காதலை இன்னும் மெருகேற்றுகிறது...
உன் மீதான என் பொய் கோபமும்
என் மீதான உன் பொய் சண்டையும்
நம் காதலை இன்றும் வாழவைக்கிறது...
இப்படியே தொடரும் நம் காதலில்
உன் மடி மீது
என் உயிர் பிரியும்
வரம் வேண்டி
நம் காதலிடம் யாசிக்கிறேன்!
Posted at 8:51 AM | Labels: காதல் கவிதை | 0 Comments
உலகின் மிகப்பழைமையான காதல் கவிதை !
மணவாளனே,
என் நெஞ்சிற்கினியவனே,
பெரும்பேரழகன் நீ,
தேனைப் போன்று இனியவனே…
மணவாளனே,
உன்னால் நான் எடுத்துச்செல்லபடுவேன்
பள்ளியறைக்கு.
Posted at 7:17 AM | Labels: காதல் கவிதை | 0 Comments
அவளுக்கு !
மழையில் நனைவது மிகவும் பிடிக்கும் என்றாள்
-அன்புடன் காதலன் .......!
அவளுக்கு !
அது மழை அல்ல என் கண்ணீர் என்று
Posted at 7:09 AM | | 0 Comments
காதல் என்றால் என்ன?
காதல் என்றால் என்ன?
நேற்று என் மனது என்னிடம் கேட்ட கேள்வி இது.....
நான் சொன்ன பதில்
வெறுமையாய்க்கிடக்கும் இதய அறைகளில்
வாடகைக்காய் வந்திருக்கும் ஒரு குடும்பம்
மாதாந்த வாடகையாக ஓரத்தில் ஒரு சிணுங்கல்
அச்சிணுங்கலின் ஈரலிப்பில் உப்பிப்போன இதயம்.
சில வேளைகளில் சிறு சிறு சிராய்ப்புகள்
அச்சிராய்ப்பினுள் கொதிக்கின்ற எண்ணெய்க் குதமாய்
வெற்றுப் பையுடன் ஏங்கும்
ஏழைகளின் அங்கலாய்ப்பு.
காதலின் பின் உன் மூளைக்கும்
உன் வீட்டு மூலைக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா
இரண்டிலுமே கவலைப் புழுதியால்
படிந்த ஒட்டடைகளின் சாம்ராஜ்யம்.
அடிக்கடி சிரித்துக்கொள்வாய்
நீ காலைக் கடன் முடிக்கும் வேளை கூட
ஏன் தெரியுமா
உன்னால் இயன்ற கடன் ஒன்றை கழித்ததற்காக.
சில வேளைகளில் நீயும் ஞானியாவாய்
உன் தலைக்குப்பின்னால் ஞான ஒளி தோன்றும்
அதை சில பேர் தப்பாக நினைத்து
உன்னிடம் தீட்சை பெற வருவர்
அவர்களுக்கு தெரியாது போலும்
அந்த ஒளியின் அடிப்படை மூலம் எதுவென்று
அது தெரிந்தால்
அவர்களும் ...
வேண்டாம் எதற்கு இந்த வம்பு
Posted at 6:45 AM | Labels: காதல் கவிதை | 0 Comments
என் உயிர் நீ
Posted at 6:42 AM | | 0 Comments
முதல் முதலாக
நீ என்னை எழுத்துக்கூட்டி
வாசித்து முடித்தபோது
எல்லாக் கவிதைகளைப்
போலவும் நானும் உன்
வாழ்த்துக்காய் காத்திருக்க
முன்னமே
"என்றும் நீ எனக்குப்
பிடித்த கவிதையாக
இருந்துவிட முடியாது
ஏனெனில்
எழுத்துப் பிழைகள்
அதிகம் நிறைந்த
கிறுக்கலாய் இருக்கிறாய்"
என நீ கூறிவிட்டு
என்னை கசக்கி
எறிந்த இடம்
இன்றும் என்னை
கண்ணீரால் கவி
எழுத வைக்கிறது
Posted at 6:36 AM | | 0 Comments
காதல் கவிதை
கருப்பு மேகமெல்லாம்
கால்நடையாய் நடந்து
வானத்துச் சாலையில்
வட்டமிடும் நேரம்.....
மழையெனும் மகள்
மண்ணுக்கு
முத்தமிடும் கோலம்
மழையிட்ட முத்தத்தில்
மண்ணெல்லாம் சிரிக்க.....
முத்தமிடும் கோலத்தை
முதன்முதல் காணும்
மலர்களும் நாணி
மோகம் கொண்டு ஆட.....
தாகம் கொண்ட
செடிகள் எல்லாம்
தண்ணீர் தாகம் தீர.....
வானம் பார்த்த பூமியை
நம்பி வாழும்
பொக்கைவாய் கிழவரும்
வேகம் கொண்டு ஆட
மொத்தத்தில் இது
பொண்ணான நேரம்
போகதே மழையே
எங்களைவிட்டு தூரம்
Posted at 8:23 AM | Labels: காதல் கவிதை | 0 Comments
காதல் கதை
அதிகாலை 3 மணி ஊரே தூங்கிக்கொண்டிருக்கிறது.தன் அறை கதவை மெல்ல திறந்து வெளியே வந்தாள் ரேவதி,பக்கத்து அறையில் தன் பெற்றோர் நன்கு தூங்குவதை உறுதிசெய்தபின், தான் ஏற்க்கனவே தயாராக வைத்திருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.
மெல்லிய நிலா ஒளி வீசுகிறது, மயாணத்தை கடக்கும் வழிபோக்கனை போல் பயந்தபடியே நடந்து தெருமுனையை அடைந்தாள். அங்கு அவளுக்காக காத்திருந்தான் ரமேஷ். இருவரும் காரில் ஏற கார் வேகமாக புறப்பட்டது
5 மணி, தூங்கிக்கொண்டிருந்த பார்வதி பால்காரன் சப்தம்கேட்டு எழுந்தார். பாலை வாங்கி அடுக்களையில் வைத்துவிட்டு தன் காலை பணிகளை துவக்கினார்
6 மணி , தங்களின் திட்டப்படி இருவரும் கோவிலை
வந்தடைந்தனர்.அங்கு அவர்களின் வருகைக்காக காத்திருந்த நன்பர்கள் குழு அவர்களை வரவேற்றது.
“ஏண்ட மாப்ளே லேட்டு”
“ரேவதி வர்ரத்துக்கு லேட்டாயிடுச்சு”
“சரிசரி அங்கபோய் குளிச்சிட்டு அதுல இருக்கிற புதுத்துணிய போட்டுக்கிட்டு சீக்கிரமா ரெடியாகுங்க , ம்ம் சீக்கிரம்.”
பாலை காய்ச்சி வைத்துவிட்டு தன் மகளை எழுப்புவதற்க்காக
அவள் அறைக்கு செல்கிறார். மகள் அங்கு இல்லாதது கண்டு மொட்டை மாடியில் சென்று பார்த்தார், வீடு முழுதும் தேடியும் தன் மகள் இல்லாததால் பதற்றமாகி தன் கனவர் கேசவனை எழுப்புகிறார்.
“என்னங்க ரேவதிய காணலங்க”
“நல்லா தேடிப்பரு தோட்டத்து பக்கம் உட்காந்து படிச்சுகிட்டிருப்பா”
“எல்லா பக்கமும் தேடிட்டேங்க , எங்கேயும் காண்ல”
“என்ன சொல்ற நல்லா பாத்தியா?”- என்று கேட்டுக்கொண்டே எழுந்து தன் மகளின் அறைக்கு வருகிரார்.அங்கே அவள் இல்லை
கட்டிலின் மேல் ஒரு கடிதம் இருக்கிறது. வீட்டைவிட்டு ஓடிபோகும் எல்லோரும் எழுதிவைக்கும் அதே கடிதம். பிரபு..
“ என் மகளா இப்படிபண்ணீட்டா?” - என்று தன் நெஞ்சில் கைவைத்துதபடி தரையில் சாய்ந்தார்.
இருவரும் உடை மாற்றிக்கொண்டு வந்தார்கள். “ மாப்ள இப்பத்தாண்ட நீ நிஜமாவே மாப்ள” - என்று ஒரு நன்பன் கிண்டல் செய்ய அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி வெள்ளம்.
கேசவன் கீழே விழுந்ததும் பார்வதியிட்ட சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். கேசவனின் நிலையையும் கையில் இருக்கும் கடிதத்தையும் பார்த்ததும் அவர்கள் விவரம் புரிந்துகொண்டார்கள். “எல்லாரும் இப்படி பாத்துக்கிட்டெ இருந்தா எப்படி, யாராச்சும் டாக்டருக்கு போன் பண்னுங்க” என்றதும் ஒருவர் போன் செய்ய சென்றார்.
“ ம்ம்ம்ம் ஸ்கூல்ல வாத்தியார இருந்தவரு,வயசு பொண்ணுக்கு படிப்பென்னத்துக்குனு சொந்தகாரவுக சொன்னதயேல்லா கேக்காம “யேம் புள்ளய பெரியபடிப்பு படிக்க வைப்பேன்னு” சொல்லி காலேசு அனுப்பிவச்சாரு ,அது என்னடான அப்படி பண்ணிபுடுச்சு.ம்ம்ம்ம் எல்லா தலையேழுத்து” - என்று கூட்டத்திலிருந்த ஒருவரின் பேச்சு அரைமயக்கத்திலிருந்த கேசவனின் காதில் விழ, அவர் கண்களில் இருந்து இறுதியாய் கண்ணீர் கசிந்தது.
“மாப்ள உறவுக்காறங்க இல்லேனு வருத்தப்படத எல்லாத்துக்கும் சேத்து நாங்க இருக்கொ(ம்), மேளதாளம்,ஐயர் எல்லாம் ரெடி நீ தாலி கட்டவேண்டியதுதான் பாக்கி “ என்றான் ஒருவன்.ஐயர் மந்திரங்கள் ஓத துவங்கினார்
டாக்டரின் வாகனம் வந்து வாசலில் நின்றது.உள்ளே வந்த டாக்டர் கேசவனை பரிசோதித்தார்.சிறிது மௌனத்திற்க்கு பிறகு
“சாரி சார் உயிர் போயி ரொம்பநேரமாயிடிச்சு..” என்றார்.
மேளதாளங்கள் முழங்க ரேவதியின் கலுத்தில் தாலிகட்டினான் ரமேஷ்.தங்கள் கனவு நினைவான மகிழ்ச்சியில் ரமேஷ்,ரேவதியின் முகத்தில் கோடி புன்னகைகள்
மார்பிலும் வயிற்றிலும் அடித்துஅழுதுகொண்டிருக்கிறாள் பார்வதி..
Posted at 8:21 AM | Labels: காதல் கதை | 0 Comments
இதுதான் காதல்
தேன்சுரக்கும் மலருக்கோ வண்டில் காதல்
தென்றலோ காதலால் பூமீது மோதும்
தெரிந்தாலும் வண்டந்த வண்டோடு போகும்!
சலசலக்கும் அருவிக்கோ நதியில் காதல்
சஞ்சரிக்கும் நதியதற்கோ கடலில் காதல்
அருவிதினம் ஊற்றெடுத்து நதியில் பாயும்
அலைகடலில் தலைவைத்து நதியும் சாயும்!
பஞ்சுநிகர் முகிலதற்கோ நிலவில் காதல்
பனிபடர்ந்த மலைமீதே நிலவின் காதல்
கெஞ்சிமுகில் சிலவேளை நிலவைப் பார்க்கும்
கொஞ்சிவிட நிலவந்த மலையை நோக்கும்!
இமைகளுக்கோ கண்மீது இருக்கும் காதல்
இருவிழிக்கும் அதைமீறி அப்பால் காதல்
இமைமூடித் தனையந்த விழிக்குக் காட்டும்
இருவிழியும் அதைவிட்டு வெளியே நோக்கும்!
வான்மழைக்கு நிலன்மீது வளரும் காதல்
வன்நிலமோ நெருஞ்சிக்கே மார்பு காட்டும்
வான்மழையின் மென்துளியை விரும்பா மண்ணோ
வளர்நெருஞ்சி முட்கீறும் நோவுக்கு ஏங்கும்!
தனையடக்கித் திசைவகுக்கும் துடுப்பைக் காவிக்
காதலித்து மகிழ்ந்திருக்கும் ஓடம் என்றும்
அலையெனும்கை மெதுவாக எடுத்து ஏந்தும்
ஆறுகளைப் பார்க்காது இதுதான் காதல்!
Posted at 8:18 AM | Labels: காதல் கவிதை | 0 Comments
வாழும் காலங்கள்
வாழும் காலங்கள் யாவும் வாழ்வதற்கே வாழ்ந்து தான் பார்ப்போமே வாசம்வீசிடும் பூப்போல் சிரித்திடுவோமே வாருங்கள் வாழ்ந்து பார்ப்போமே செல்லும் பாதை இங்கே பார்த்தால் கல்லும் முள்ளும் கரடும் முரடும் கண்கள் திறந்தே நாமும் வைத்தால் காலம் முழுதும் மகிழ்வோமே உள்ளம் முழுதும் உண்மை வைத்தால் உன்னை வெல்ல உலகில் எவருமில்லை வெள்ளம் போலே இன்பம் பொங்கும் வேறு வாழ்வில் ஏதுமில்லையே சொல்லச்சொல்ல நீயும் திருந்து சோகம் தீரும் உன்னைக் களைந்து சொந்தபந்தம் எல்லாம் உணர்ந்து சொர்க்கமாகும் வாழ்க்கை விருந்து
Posted at 8:16 AM | Labels: காதல் கவிதை. | 0 Comments
நீ இல்லாமல் நான் இல்லை
எப்படித்தான் இருகையால்
பொத்திவைத்தாலும்
விரலிடுக்கில் வழிகிற நீரைப் போல
வெளிவந்துவிடுகிறது.
என் காதல்!
உன்னைப் பார்த்து முதன்முதலாய்
வெட்கம் வந்தபோது
காதல் வந்ததை உணர்ந்தேன்!
உன்னிடம் காதலைச் சொல்ல வந்தாலோ
மறுபடி வெட்கம்தான் வருகிறது!
இன்பத்துள் இன்பமா?
துன்பத்துள் துன்பமா?
காதல்.
காதலின்பம் – மலை.
பிரிவுத்துயர் – கடல்.
அதிகமெது,
உயரமா? ஆழமா?
காதல் - கடல்.
நீந்தினால் கரையேரலாம்.
பிரிவு - கரையில்லாத கடல்.
நீந்தலாம்…அவ்வளவுதான்!
நான் துணைதான்!
பரிவில் உனக்கும்…
பிரிவில் இரவுக்கும்…
கூடிக்களித்த பொழுதுகளில் ஓடிப்போகிறது.
நரக வேதனையில் நானிருக்க..
நகர மறுக்கிறது, உன்னைவிடக் கொடுமையானது இந்த இரவு.
என் இதயத்தைப் போல
உன் கூடவேப் போயிருந்தால்
என்னிடமிருந்து அழவேண்டிய பாவமில்லை
இந்தக் கண்களுக்கு.!!!
Posted at 8:05 AM | Labels: காதல் கவிதை | 0 Comments
காதலும்..... காமமும்.....!
வானத்து நிலவில்.....
வரைந்த ஓவியமே....!
என் காதல் கதையைக்
கேட்டுப்பார்.....
முற்றத்து நிலவில்....
முல்லைப்பந்தல் நடுவில்
முதல் முறை என் கன்னத்தில்
முத்தமிட்ட சுவாசக் காற்றே - என்
முழு இதையத்தையும்
முகாம் ஆக்கி விட்டாய்.
நிலவின் ஒளியில்.....
நீண்ட நதியின் நடுவில்
முதல் முறை என் விழியில்
வித்திட்ட காதல் தேவதையே - என்
முழு இதயத்தையும்
சேமித்து விட்டாய்;.
மலையின் உச்சியில்.....
மாலை வேளையில்
Posted at 7:59 AM | Labels: காதல் கவிதை | 0 Comments
காதல் என்பதா...........??
சுற்றி பார்க்கும் கிளி போல்
தத்தை நெஞ்சு தத்தளிக்குதே...
தூங்கும் போது விழித்து
நான் விழித்த பின்பும் கனவில்
வயது என்னை வம்பு செய்யுதே...
மாலை நேரம் வந்தால்
என்மனதில் நாணம் இல்லை
மார்பில் உள்ள ஆடை
என் பேச்சை கேட்கவில்லை
இதய கோடையில்
பூக்கள் எரியுதா
இதற்க்கு பேர் காதல் என்பதா...
மனசில் மையம் தேடி
புயல் மையம் கொண்டதென்ன
எந்த நேரம் கரையை கடக்குமோ...
கடலில் அலைகள் போலே
என் உடலில் அலைகள் தோன்றி
கும்மி கொட்டி கொந்தளிக்குமோ...
என்ன நேரும் என்று
என் அறிவு அறியவில்லை
ரகசியங்கள் அறிந்தால்
அதில் ரசனை ஏதுமில்லை
என்னை கொல்வதா
இளைய மன்மதா
இதற்க்கு பேர் காதல் என்பதா...
காதல் என்பதா....................
Posted at 4:52 AM | | 0 Comments
முத்தம்
முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?
*
உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
*
உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.
*
பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!
*
நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!
Posted at 7:23 AM | Labels: காதல் கவிதை | 0 Comments
ஓவியம்
இரவில் தூங்கப் போகும்போது
தோடுகளையும், வளையல்களையும்
கழற்றி வைப்பதை போல்
உன் சிறகுகளை
எங்கே கழற்றி வைப்பாய்?
புல்லின் மீதிருக்கும் பனித்துளியை
நினைக்காமல் இருக்க முடிவதில்லை
உன் ஈரம் படிந்த இதழ்களை
பார்க்கும்போதெல்லாம்!
கொஞ்ச நேரம்
பேசாமலிரு!
தொடர்ச்சியான சங்கீதத்தை
என் காதுகள் ஏற்பதில்லை!
சத்தமே எழுப்பாமல்
நீ அருகில் செல்லும்போதெல்லாம்
பட்டுப்பூச்சி பறந்து விடுகிறது
மறுபடியும் தவற விட்டதை
நினைத்து நீ முகம் சுளிக்கிறாய்
தோல்வியிலும் நீ எத்தனை அழகு
தொடர்ந்து முயற்சி செய் என்கிறேன்!
பட்டாம்பூச்சிகள் பறந்து விடும்
என்ற நம்பிக்கையில்!
Posted at 7:12 AM | Labels: காதல் கவிதை | 0 Comments